இலங்கையின் உள்ளக விவகாரங்களில் தலையிடும் உரிமை ஐ.நா.வுக்கு கிடையாது: ஜி.எல் பீரிஸ்

Published By: J.G.Stephan

10 Feb, 2021 | 11:32 AM
image

(இராஜதுரை ஹஷான்)
இலங்கையின் உள்ளக விவகாரங்களில் தலையிடும் உரிமை ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவைக்கு கிடையாது. மனித உரிமை ஆணையாளர் வரையறைக்குட்பட்டு செயற்பட வேண்டும் என தெரிவித்த கல்வி அமைச்சர் பேராசிரியர் ஜி.எல் பீரிஸ் , யுத்தம் முடிவடைந்த பிறகு வடக்கு மற்றும் கிழக்கு மாகாணம் குறித்து சர்வதேசம் முன்வைத்த கோரிக்கைகள் பலவற்றை முழுமையாக நிறைவேற்றியுள்ளோம்.

 தேசிய பாதுகாப்பினையும், நாட்டின் சுயாதீனத்தன்மையினையும் முன்னிலைப்படுத்தி அரசாங்கம் செயற்படும் எனவும் தெரிவித்தார்.

அவர் மேலும் குறிப்பிடுகையில், ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையின் 46ஆவது கூட்டத்தொடரில் இலங்கை மீதான விவாதம் எதிர்வரும் 22 ஆம் திகதி இடம்பெறவுள்ளது. மனித உரிமை கூட்டத்தொடரில் இலங்கை தொடர்பான விவாதத்தின் போது அரசாங்கம் இம்முறை தீர்க்கமான தீர்மானங்களை எடுக்கும்.

இலங்கை தொடர்பில் ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவை ஆணையாளர் வெளியிட்டுள்ள அறிக்கை நாட்டின் சுயாதீனத்தன்மைக்கும், மனித உரிமை பேரவையின் பொறுப்பிற்கும் அப்பாற்பட்டது. இலங்கையின் அரசியலமைப்பு விவகாரம், இராணுவ அதிகாரிகளுக்கு பதவியுயர்வு, தேசிய பாதுகாப்பு, பாராளுமன்ற சட்டம் ஆகிய விடயங்களில் தலையிடும் உரிமை ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையின் ஆணையாளருக்கு கிடையாது.

30 வருட கால யுத்தம் முடிவடைந்த பின்னர் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்கள் துரிதமாக அபிவிருத்தி செய்யப்பட்டன. தமிழ் மக்கள் விவகாரத்தில் சர்வதேசம்கேட்டுக் கொண்ட விடயங்களை முழுமையாக செயற்படுத்தியுள்ளோம். விடுதலை புலிகள் அமைப்பின் போராளிகளுக்கு புனர்வாழ்வளிக்கப்பட்டு அவர்கள் சமூகத்தோடு சமூகமாக்கப்பட்டார்கள்.

அரசியல் நோக்கங்களை அடிப்படையாகக் கொண்டு அரசாங்கம் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் அபிவிருத்தி பணிகளை முன்னெடுக்காது.பொது கொள்கையின் நிமித்தம் அபிவிருத்தி பணிகள் முன்னெடுக்கப்படும். வடக்கு மாகாணத்தில் கல்வித்துறையை  மேம்படுத்த உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

அமைப்பு முறை மாற்றம் ஏற்பட்டால் மாத்திரமே...

2024-03-29 12:22:11
news-image

கரையோர மார்க்கத்தில் ரயில் சேவைகள் தாமதம்

2024-03-29 12:04:59
news-image

மக்களே அவதானமாக இருங்கள் ; சமூக...

2024-03-29 12:09:37
news-image

இரு மாணவர்கள் மின்சாரம் தாக்கி வைத்தியசாலையில்...

2024-03-29 12:02:26
news-image

தேர்தல் திருத்தச் சட்டம் : ஹக்கீம்...

2024-03-29 11:25:08
news-image

கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை...

2024-03-29 11:11:34
news-image

பிளவை நோக்கி பொதுஜனபெரமுன- டெய்லிமிரர்

2024-03-29 09:59:01
news-image

எந்த தேர்தலில் முதலில் நடைபெறவேண்டும் என்பதை...

2024-03-29 09:42:41
news-image

இன்று பெரிய வெள்ளி

2024-03-29 09:47:02
news-image

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பில் கசிப்பு உற்பத்தி நிலையம்...

2024-03-29 09:20:02
news-image

பொது சுகாதார பரிசோதகர் மீது துப்பாக்கிச்...

2024-03-29 09:27:51
news-image

இன்றைய வானிலை

2024-03-29 06:43:30