சம்பள நிர்ணய பேச்சுவார்த்தை தோட்டத்தொழிலாளர்களுக்கு சாதகமாக அமையவில்லை - உதயகுமார் 

Published By: Digital Desk 4

10 Feb, 2021 | 06:11 AM
image

(ஆர்.யசி, எம்.ஆர்.எம்.வசீம்)

சம்பளம் என்ற ஒரு விடயத்தை மாத்திரம் இறுதித் தீர்வாக ஏற்றுகொள்ள முடியாது. இதனையும் தாண்டி தொழிலாளர்களுக்கு கிடைக்க வேண்டிய தொழில் உரிமைகள், தொழில் ரீதியான சலுகைகள் போன்றவற்றிற்கும் கூடிய கவனம் செலுத்தபட வேண்டும் என எதிர்க்கட்சி உறுப்பினர் எம்.உதயகுமார் சபையில் தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் செவ்வாய்க்கிழமை, தொழில் அமைச்சின் கீழுள்ள ஊழியர் சகாய நிதியச் சட்டத்தின் கீழான ஒழுங்குவிதிகள் மீதான விவாதத்தில் உரையாற்றும் போதே அமைச்சர் இதனை கூறினார். 

அவர் மேலும் கூறுகையில்,

இவ்வளவு காலமாக இழுபறி நிலையில் இருந்த பெருந்தோட்ட தொழிலாளர்களின் சம்பள விடயம் நேற்றுடன் சம்பள நிர்ணய சபையின் தலையீட்டுடன் முடிவுக்கு வந்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

ஆனால் யதார்த்தம் என்னவென்றால் இந்த பிரச்சினை இழுத்தடிப்பு செய்யப்படும் என்பதும், மேலும் பல குழப்பங்களுக்கு வழிவகுக்கும் என்பதும் தெளிவாக தெரிகின்றது.

சம்பளம் என்ற ஒரு விடயத்தை மாத்திரம் இறுதித் தீர்வாக ஏற்றுகொள்ள முடியாது. இதனையும் தாண்டி தொழிலாளர்களுக்கு கிடைக்க வேண்டிய தொழில் உரிமைகள், தொழில் ரீதியான சலுகைகள் போன்றவற்றிற்கும் கூடிய கவனம் செலுத்தபட வேண்டும்.

சம்பள நிர்ணய பேச்சுவார்த்தையானது தொழிலாளர்களுக்கு சாதகமான விதத்தில் அமையவில்லை, சம்பள நிர்ணய சபையில் அடிப்படை சம்பளம் 900 ரூபா எனவும் மேலதிக கொடுப்பனவு 140 ரூபா என்ற தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

ஆனால் 13 நாட்கள் மாத்திரமே வேலை வழங்க முடியும் என நிறுவனங்கள் அறிவித்துள்ளமை வெட்ட வெளிச்சமாக ஊடகங்கள் மூலமாக தெளிவாக வெளிவந்துள்ளது. 

பலர் அதனை நிராகரித்தாலும் அதுதான் உண்மை. ஒருபக்கம் சம்பளத்தை அதிகரித்துவிட்டு மறுபக்கம் வேலை நாட்களை குறைப்பதை ஏற்றுகொள்ள முடியாது. இது தொழிலாளர்களின் மாதாந்த சம்பளத்தில் பாரிய தாக்கத்தை ஏற்படுத்துவது மட்டுமல்லாது, மாதாந்த சம்பளத்தில் பாரிய குறைப்பையும் ஏற்படுத்தும். நாளாந்த சம்பளத்திற்கு போராடுவது கைவிடப்பட்டு இப்போது மாதாந்த சம்பளத்திற்காக போராட வேண்டிய நிலைமைக்கு தள்ளப்பட்டுள்ளோம்.

சம்பள நிர்ணய சபையின் கோரிக்கையை நாம் முழுமையாக வரவேற்கிறோம். ஆனால் மாதாந்த சம்பளமாக 25 ஆயிரம் ரூபா வழங்கப்பட வேண்டும். இதனை நிறைவேற்ற வேண்டும். கூட்டு ஒப்பந்தத்தை போல இதுவும் ஏமாற்று வேலையாக அமைந்துவிடக்கூடாது. இது எமது மக்களின் வாழ்வாதாரத்தை பாதிக்கும் விடயமாகும் என்றார். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

யாழ். ஜனாதிபதி மாளிகையை வருமானம் ஈட்டும்...

2025-03-21 16:30:43
news-image

அமெரிக்க இந்தோ - பசுபிக் கட்டளைப்பீடத்தின்...

2025-03-21 18:16:14
news-image

யாழில் சீன சொக்லேட் வைத்திருந்தவருக்கு அபராதம்

2025-03-21 16:42:33
news-image

மத்திய தபால் பரிவர்த்தனை நிலையத்தில் ரூ...

2025-03-21 17:16:03
news-image

பொலன்னறுவையில் சட்டவிரோதமாக மணல் அகழ்வில் ஈடுபட்ட...

2025-03-21 16:32:43
news-image

சர்வாதிகார நாடுகளுக்கு இடையே இராணுவ ஒத்துழைப்பு...

2025-03-21 17:05:15
news-image

உலக வங்கியின் பூகோள டிஜிட்டல் மாநாட்டில்...

2025-03-21 17:09:26
news-image

161 ஆவது பொலிஸ் மாவீரர் நினைவேந்தல்

2025-03-21 16:45:59
news-image

ஓய்வூதியத்தை எதிர்பார்த்திருந்த 2000க்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு...

2025-03-21 17:07:00
news-image

ஹீத்ரோ விமானநிலையம் மூடப்பட்டது ; ஸ்ரீலங்கன்...

2025-03-21 15:26:30
news-image

மது போதையில் பஸ்ஸை செலுத்திச் சென்ற...

2025-03-21 15:48:13
news-image

15 வயது சிறுமிக்கு பாலியல் துன்புறுத்தல்...

2025-03-21 15:24:44