1000 ரூபா விடயத்தில் கம்பனிக்காரர்களுடன் இணைந்து அரசாங்கம் நாடகமொன்றை அரங்கேற்றி வருகின்றது - வேலுகுமார்

Published By: Digital Desk 4

09 Feb, 2021 | 07:59 PM
image

(ஆர்.யசி,எம்.ஆர்.எம்.வசீம்)

தோட்டத்தொழிலாளர்களுக்கு ஆயிரம் ரூபா சம்பள விடயத்தில் அரசாங்கம் கம்பனிகளுடன் இணைந்து நாடகம் ஒன்றை அரங்கேற்றி வருகின்றது.

இதன் இறுதியில் தொழிலாளர்களுக்கு தற்போது இருப்பதும் இல்லாமல் போய்விடும் நிலைமையே ஏற்படும். அவ்வாறான நிலைக்கு நாங்கள் ஒருபோதும் இடமளிக்கமாட்டோம் என எம். வேலுகுமார் தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் இன்று செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற தொழில் அமைச்சின் கீழ் ஊழியர் சகாய நிதியச்சட்டத்தின் கீழான ஒழுங்குவிதிகள் மீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.

அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில்,

தோட்டத்தொழிலாளர்களுக்கு ஆயிரம் ரூபாவை பெற்றுக்கொடுக்க அரசாங்கம் எடுத்துவரும் முயற்சியை பாராட்டுகின்றேன்.

சம்பள நிர்ணய சபையினூடாக ஆயிரம் ரூபா என்ற இலக்கத்துக்கு அரசாங்கம் சென்றிருக்கின்றது. என்றாலும் இதன் மூலம் தொழிலாளர்களின் கோரிக்கை நிறைவேற்றப்பட்டதாக தெரிவிக்க முடியாது.

ஏனெனில் அரசாங்கம் ஆயிரம் ரூபா பெற்றுக்கொடுக்க ஆரம்பித்திருக்கின்றது. என்றாலும் முதலாளிமார் சம்மேளனம் அதற்கு எதிர்ப்பு தெரிவித்திருக்கின்றது. 

மேலும் தோட்டங்கள் அரசாங்கத்துக்கு சொந்தமானவை. அதன் நிர்வாகத்தையே கம்பனிகளுக்கு வழங்கப்பட்டிருக்கின்றது.

அப்படியென்றால் அந்த கம்பனிகளை ஏன் அரசாங்கத்துக்கு கட்டுப்படுத்த முடியாது என கேட்கின்றேன். அரசாங்கத்தின் ஆயிரம் ரூபாவை வழங்குவதாக இருந்தால் மாதத்துக்கு 13நாட்களே வேலை வழங்கப்படும் என கம்பனிகள் தெரிவிக்கின்றன.

ஆனால் எமது இலக்காக இருப்பது, தோட்டத்தொழிலாளர்களுக்கு நாளொன்றுக்கு ஆயிரம் ரூபா அடிப்படையில் 25 நாட்களுக்கு 25ஆயிரம் ரூபா வழங்கப்படவேண்டும் என்பதாகும்.

அதேபோன்று ஆயிரம் ரூபா வழங்குவதுடன் தோட்டத்தொழிலாளர்களுக்கு ஏற்கனவே இருந்துவரும் வருடத்துக்கு 300நாட்கள் வேலை மற்றும் வரப்பிரசாதங்கள் அவ்வாறே வழங்கப்படவேண்டும்.

அதன் பிரகாரமே ஆயிரம் ரூபாவை அரசாங்கம் பெற்றுக்கொடுக்கவேண்டும். ஆனால் இந்த முறைக்கு கம்பனிகள் தங்களது எதிர்ப்பை தெரிவித்திருக்கின்றன. அப்படியானால் இந்த கம்பனி காரர்களை கட்டுப்படுத்த முடியாதளவுக்கு அரசாங்கம் தள்ளப்பட்டிருக்கின்றதா அல்லது கம்பனி காரர்களுடன் இணைந்து அரசாங்கம் நாடகம் ஒன்றை நடடித்து வருகின்றதா என கேட்கின்றேன். 

மேலும் கம்பனி காரர்களின் தீர்மானத்துக்கமைய ஆயிரம் ரூபா சம்பளத்தை வழங்கி 13நாட்களுக்கு வேலை வழங்கப்பட்டால் தோட்டத்தொழிலாளர்களுக்கு 13ஆயிரம் ரூபா சம்பளமே கிடைக்கும். இதனால் மரத்தில் இழுந்து விழுந்தவனை மாடு முட்டிய கதையாகவே தோட்டத்தொழிலாளர்களுக்கும் ஏற்படும் என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

நாட்டுக்குள் மீண்டும் இனவாதத்தை தூண்ட வேண்டாம்...

2026-01-18 19:21:04
news-image

கதிரியல் தொழில்நுட்பவியலாளர்கள் 21ஆம் திகதி பணிப்பகிஷ்கரிப்பில்...

2026-01-18 17:25:12
news-image

“வாழ்நாள் சாதனையாளர் விருது” பெறும் 5...

2026-01-18 19:11:24
news-image

அரசியல் நோக்கங்களோ அல்லது வேறு விடயங்களோ...

2026-01-18 19:15:36
news-image

கசிப்பு வியாபாரியை கைதுசெய்யச் சென்ற பொலிஸாரை...

2026-01-18 18:40:51
news-image

யாழில் போதைப்பொருளை விற்க முயன்ற இரு...

2026-01-18 18:26:42
news-image

மட்டக்களப்பில் ரயில் தண்டவாளத்துக்கு அருகில் மோட்டார்...

2026-01-18 18:19:28
news-image

2025 நவம்பருக்குள் ஜனாதிபதியின் தேர்தல் விஞ்ஞாபனத்தின்...

2026-01-18 17:58:32
news-image

நாட்டில் தொற்றா நோய்களை கட்டுப்படுத்தவும் தடுக்கவுமான...

2026-01-18 18:14:12
news-image

யாழில் கோர விபத்து - ஒருவர்...

2026-01-18 17:47:20
news-image

பல வருடங்களாக கசிப்பு உற்பத்தியில் ஈடுபட்டவர்...

2026-01-18 18:05:04
news-image

மக்கள் விடுதலை முன்னணியின் ஆரம்பகால உறுப்பினரான...

2026-01-18 16:52:59