(எம்.மனோசித்ரா)
சட்டக்கல்லூரி இறுதி பரீட்சையை ஆங்கில மொழியில் நடத்துவது தொடர்பான பிரச்சினை 2013 ஆம் ஆண்டு முதல் காணப்படுகிறது. இந்த பிரச்சினைக்கு மாணவர்களில் பெருமளவானோரின் கோரிக்கைக்கு அமைய தீர்வு வழங்கப்படும் என்று அமைச்சரவை பேச்சாளர் கெஹெலிய ரம்புக்வெல்ல தெரிவித்தார்.
அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பு இன்று செவ்வாய்கிழமை இணையவழியூடாக நடைபெற்றது.
இதன் போது 2024 முதல் சட்டக்கல்லூரி தேர்வினை ஆங்கில மொழியில் மாத்திரம் நடத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறமை தொடர்பில் வினவிய போது இதனைத் தெரிவித்த அமைச்சர் மேலும் கூறுகையில் ,
இந்த தீர்மானத்தால் மனித உரிமைகள் மீறப்படுகிறது என்று கூறினால் அதனை மனித உரிமைகள் ஆணைக்குழுவூடாக தீர்த்துக் கொள்ள முடியும். தமிழ் மற்றும் சிங்களம் என்பவை தேசிய மொழிகளாக காணப்படும் அதேவேளை ஆங்கிலம் தொடர்புபடுத்தல் மொழியாகக் காணப்படுகிறது. இந்த பிரச்சினை பல வருடங்களுக்கு முன்னரிலிருந்தே காணப்படுகிறது.
எனவே இது மாணவர் சங்கம் உள்ளிட்டவற்றால் பேசி தீர்க்கப்பட வேண்டியவையாகும். சட்ட கல்வி தொடர்பான புத்தகங்கள் ஆங்கில மொழியில் காணப்படுவதால் சிலர் இவ்வாறான கோரிக்கையை முன்வைத்திருந்தனர். எனினும் தற்போதுள்ள மாணவர்களில் பெருமளவானோரின் கோரிக்கைக்கு அமைய இதற்கான தீர்வு எடுக்கப்படும். இதில் பக்க சார்பாகவோ சர்வாதிகாரமாகவோ தீர்மானங்கள் எடுக்கப்பட மாட்டாது என்றார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM