மோட்டார் வாகன ஆணை­யா­ள­ருக்கு எதி­ராக எப்.சி.ஐ.டி. விசா­ரணை

Published By: Robert

10 Aug, 2016 | 09:24 AM
image

மோட்டார் வாகான ஆணை­யாளர் நாய­கத்­துக்கு எதி­ராக நிதிக் குற்றப் புல­னாய்வுப் பிரி­வினர் (எப்.சி.ஐ.டி.) சிறப்பு விசா­ரணை ஒன்­றினை ஆரம்­பித்­துள்­ளனர். முன்னாள் பொலிஸ் மா அதிபர் என்.கே.இலங்­ககோன் தனது பதவிக் காலத்தின் போது நிதிக் குற்றப் புல­னாய்வுப் பிரிவில் செய்த முறைப்­பாட்­டுக்கு அமை­வாக இந்த விசா­ர­ணைகள் ஆரம்­பிக்­கப்­பட்­டுள்­ள­தாக நிதிக் குற்றப் புல­னாய்வுப் பிரிவின் முதலாம் இலக்க விசா­ரணை அறையின் பொறுப்­ப­தி­காரி நேற்று கொழும்பு மேல­திக நீதிவான் நிஸாந்த பீரி­ஸுக்கு அறி­வித்­துள்ளார்.

பொதுச் சொத்து துஷ்­பி­ர­யோக சட்டம் மற்றும் கறுப்புப் பண சுத்­தி­க­ரிப்பு சட்டம் ஆகி­ய­வற்றின் கீழ் இந்த விசா­ர­ணைகள் முன்­னெ­டுக்­கப்­பட்­டுள்­ள­தாக சிறப்பு பீ அறிக்கை ஊடாக பொலிஸார் நேற்று நீதி­வா­னுக்கு அறி­வித்­தனர்.

மோட்டார் வாகன ஆணை­யாளர் நாயகம், அரச சொத்­துக்­களை தவ­றான வழியில் பயன்­ப­டுத்தி, தனது பதவி நிலையை உப­யோ­கப்­ப­டுத்திக் கொண்டு மோசடி நட­வ­டிக்­கை­களில் ஈடு­பட்டு பணம் சம்­பா­தித்­துள்­ள­தாக இணை­யத்­தளம் ஒன்றில் வெளி­யான அறிக்­கையின் பிர­காரம், குறித்த விடயம் தொடர்பில் விசா­ரணை செய்­யு­மாறு முன்னாள் பொலிஸ் மா அதிபர் என்.கே.இலங்­ககோன் கடந்த 2015 டிசம்பர் 4 ஆம் திகதி நிதிக் குற்றப்புல­னாய்வுப் பிரிவில் முறைப்­பா­ட­ளித்­தி­ருந்தார்.

அந்த முறைப்­பாடு மீதான விசாரணைகளே தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் நீதிமன்றுக்கு அறிவித்துள் ளனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கடற்படை வீரர்கள் இருவர் உட்பட 4...

2024-04-19 22:16:12
news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19
news-image

மெய்வல்லுநர் ஜாம்பவான் நாகலிங்கம் எதிர்வீரசிங்கம் காலமானார்

2024-04-19 17:53:07
news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:53:58
news-image

தெவுந்தர கடற்கரையில் கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்களை பரிசோதனைக்கு...

2024-04-19 17:15:25
news-image

நுவரெலியாவில் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்த...

2024-04-19 16:14:46
news-image

சுற்றுலாப் பயணிகள் அதிகம் வருகை தரும்...

2024-04-19 16:15:27