மோட்டார் வாகான ஆணையாளர் நாயகத்துக்கு எதிராக நிதிக் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் (எப்.சி.ஐ.டி.) சிறப்பு விசாரணை ஒன்றினை ஆரம்பித்துள்ளனர். முன்னாள் பொலிஸ் மா அதிபர் என்.கே.இலங்ககோன் தனது பதவிக் காலத்தின் போது நிதிக் குற்றப் புலனாய்வுப் பிரிவில் செய்த முறைப்பாட்டுக்கு அமைவாக இந்த விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக நிதிக் குற்றப் புலனாய்வுப் பிரிவின் முதலாம் இலக்க விசாரணை அறையின் பொறுப்பதிகாரி நேற்று கொழும்பு மேலதிக நீதிவான் நிஸாந்த பீரிஸுக்கு அறிவித்துள்ளார்.
பொதுச் சொத்து துஷ்பிரயோக சட்டம் மற்றும் கறுப்புப் பண சுத்திகரிப்பு சட்டம் ஆகியவற்றின் கீழ் இந்த விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக சிறப்பு பீ அறிக்கை ஊடாக பொலிஸார் நேற்று நீதிவானுக்கு அறிவித்தனர்.
மோட்டார் வாகன ஆணையாளர் நாயகம், அரச சொத்துக்களை தவறான வழியில் பயன்படுத்தி, தனது பதவி நிலையை உபயோகப்படுத்திக் கொண்டு மோசடி நடவடிக்கைகளில் ஈடுபட்டு பணம் சம்பாதித்துள்ளதாக இணையத்தளம் ஒன்றில் வெளியான அறிக்கையின் பிரகாரம், குறித்த விடயம் தொடர்பில் விசாரணை செய்யுமாறு முன்னாள் பொலிஸ் மா அதிபர் என்.கே.இலங்ககோன் கடந்த 2015 டிசம்பர் 4 ஆம் திகதி நிதிக் குற்றப்புலனாய்வுப் பிரிவில் முறைப்பாடளித்திருந்தார்.
அந்த முறைப்பாடு மீதான விசாரணைகளே தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் நீதிமன்றுக்கு அறிவித்துள் ளனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM