ரஞ்சனை பாராளுமன்றத்திற்கு அழைத்துவர வேண்டும் : சபாநாயகர் மீது சஜித் சாடல்

Published By: Digital Desk 4

09 Feb, 2021 | 09:33 PM
image

(ஆர்.யசி,எம்.ஆர்.எம்.வசீம்)

பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்கவை பாராளுமன்றத்துக்கு அழைத்துவருவது தொடர்பாக 3 வாரங்களில் தீர்ப்பளிப்பதாக சபாநாயகர் அறிவித்தும் சபாநாயகர் அதனை செய்யவில்லை.

அதனால் ரஞ்சன் ராமநாயக்கவை இன்று முதல் பாராளுமன்றத்துக்கு அழைத்துவர நடவடிக்கை எடுக்கவேண்டும் என எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் இன்று செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற தொழில் அமைச்சின் கீழ் ஊழியர் சகாய நிதியச்சட்டத்தின் கீழான ஒழுங்குவிதிகள் மீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.

அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில்,

சிறைத்தண்டனை விதித்து தீர்ப்பளிக்கப்பட்டிருக்கும் ரஞ்சன் ராமநாயக்கவவை பாராளுமன்றத்துக்கு அழைத்துவர நடவடிக்கை எடுக்கவேண்டும் என கடந்த மாதம் 19 ஆம் திகதி சபாநாயகரிடம் நான் கேட்டுக்கொண்டிருந்தேன்.

அது தொடர்பில் 3 வாரங்களில் தீர்ப்பளிப்பதாக சபாநாயகர் அன்று  சபைக்கு அறிவித்திருந்தார். அதன் பிரகாரம் இன்றைய தினம் 3வாரங்கள் பூர்த்தியாகின்றன.

அதன் பிரகாரம் சபை ஆரம்பிக்கும்போது சபாநாயகர் அவரது அறிவிப்பில் ரஞ்சன் ராமநாயக்கவை பாராளுமன்றத்துக்கு அழைத்துவருவது தொடர்பான தனது தீர்ப்பை அறிவித்திருக்கவேண்டும்.

அவ்வாறு எதுவும் இடம்பெறவில்லை. ஆளும் கட்சி உறுப்பினர் பிரேமலால் ஜயசேகர சிறைச்சாலையில் இருந்து பாராளுமன்றத்துக்கு அழைத்துவர தீர்மானம் எடுத்த சபாநாயகர், ஏன் ரஞ்சன் ராமநாயக்கவை அழைத்துவராமல் இருக்கின்றது என கேட்கின்றேன்.

பிரேமலால் ஜயசேகரவுக்கு ஒரு தீர்ப்பும் ரஞ்சன் ராமநாயக்கவுக்கு வேறு தீர்ப்பும் இருக்க முடியாது. பிரேமலால் ஜயசேகரவுக்கு இருக்கும் வரப்பிரசாதங்கள் ரஞ்சன் ராமநாயக்கவுக்கு இருக்க வேண்டும்.

அத்துடன் ரரஞ்சன் ராமநாயக்க தனது பாராளுமன்ற உறுப்பினர் பதவியை இரத்துச்செய்வதற்கு எதிராக மேன்முறையீட்டு நீதிமன்றில் மேன்முறையீடொன்றை செய்திருக்கின்றார்.

அதன் பிரகாரம் அந்த விசாரணை முடியும்வரை பாராளுமன்ற உறுப்பினர் பதவியை ரத்துச்செய்யக்கூடாது என மேன்முறையீட்டு நீதிமன்றம் பாராளுமன்ற செயலாளருக்கு அறிவித்திருக்கின்றது. 

அதனால் பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்கவை நாளையதினம் (இன்று) பாராளுமன்றத்துக்கு அழைத்துவர நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

நான்கு ரயில் சேவைகள் இரத்து!

2024-04-19 10:50:08
news-image

18,000 மில்லி லீட்டர் கோடா விஹாரையில்...

2024-04-19 10:45:18
news-image

விருந்துபசாரத்தில் வாக்குவாதம்: ஒருவர் தாக்கப்பட்டு உயிரிழப்பு!

2024-04-19 10:20:31
news-image

சில பகுதிகளில் 12 மணித்தியாலங்கள் நீர்...

2024-04-19 10:18:39
news-image

1991 ஆம் ஆண்டு ருமேனியாவில் இடம்பெற்ற...

2024-04-19 09:59:40
news-image

காசல்ரீ நீர்த்தேக்கத்தில் நீராடச் சென்ற மாணவன்...

2024-04-19 09:36:08
news-image

போதைபொருள் கடத்தல்களை இல்லாதொழிக்க சிறப்பு மோட்டார்...

2024-04-19 10:11:07
news-image

வெற்றிலை,பாக்கு விலை உயர்வு

2024-04-19 10:16:54
news-image

சிறுவர் இல்லங்களில் சிறுவர்களின் எண்ணிக்கையில் வீழ்ச்சி!

2024-04-19 09:00:44
news-image

போதைப்பொருள் கடத்தல்காரர்களுடன் நெருங்கிய தொடர்புகளை பேணிய...

2024-04-19 09:03:35
news-image

இன்றைய வானிலை 

2024-04-19 06:12:21
news-image

இலங்கையில் சிவில், அரசியல் உரிமைகளின் எதிர்காலம்...

2024-04-18 20:41:15