(இராஜதுரை ஹஷான்)
பொதுஜன பெரமுனவின் தலைமைத்துவம் குறித்து தீர்மானம் எடுக்கும் அதிகாரம் அமைச்சர் விமல் வீரவன்சவுக்கு கிடையாது.
பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவை தலைவர் பதவியில் இருந்து நீக்க வேண்டும் என்று குறிப்பிட்ட கருத்துக்கு அவர் பகிரங்க மன்னிப்பு கோர வேண்டும் என பொதுஜன பெரமுனவின் பொதுச்செயலாளர் சாகர காரியவசம் தெரிவித்தார்.
பொதுஜன பெரமுனவின் காரியாலயத்தில் இன்று இடம் பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக் கொண்டு கருத்துரைக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அவர் மேலும் குறிப்பிடுகையில்,
பொதுஜன பெரமுன கொள்கை அடிப்படையில்உருவாக்கப்பட்ட கட்சி இதன் காரணமாகவே குறுகிய காலத்தில் நாட்டுமக்களின்பெரும்பான்மை ஆதரவை பெற்றுள்ளது.
குறுகிய நோக்கங்களை அடிப்படையாகக் கொண்டு பொதுஜன பெரமுன செயற்படவில்லை. ஒழுக்கத்தின் அடிப்படையில் கட்சி முன்னேற்றமடைந்துள்ளது.
2015ஆம் ஆண்டுக்கு பிறகு முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் ஆட்சியதிகாரம் தோற்றம் பெற வெண்டும் என பெரும்பான்மையின மக்கள் எதிர்பார்த்தார்கள் அனைவரின் எதிர்பார்ப்புக்கு மத்தியிர் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன தோற்றம் பெற்றது.
கட்சியின் தலைமைத்துவத்தை பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவுக்கு வழங்க வேண்டும் என்று அரசியல் மட்டத்தில் தீர்மானம் எடுக்கப்படவில்லை. நாட்டு மக்களே அத்தீர்மானத்தை எடுத்தார்கள்.
இடம்பெற்று முடிந்த ஜனாதிபதி தேர்தலும், பொது தேர்தலிலும் பொதுஜன பெரமுன பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவை தலைமைத்துவமாக கொண்டு மக்களாணையை பெற்றுக் கொண்டது.
யுத்தத்தை வெற்றிக் கொண்ட தலைவர் என்ற கோணத்திலேயே நாட்டு மக்கள் அவரை பார்க்கிறார்கள். ஆகவே பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவை கொண்டே 2019ஆம்ஆண்டு ஆட்சி மாற்றம் ஏற்படுத்தப்பட்டது.
பொதுஜன பெரமுனவின் தலைமைத்துவத்தை பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவிடமிருந்து பெற்று அதனை ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷவுக்கு வழங்க வேண்டும்என அமைச்சர் விமல் வீரவச்ன குறிப்பிட்டுள்ள கருத்து பாரதூரமானது.
கட்சிக்குள் தேவையற்ற பிரச்சினைகளை தோற்றுவிக்கும் வகையில் இவ்வாறான முரண்பாடான கருத்துக்கள் குறிப்பிடப்படுகின்றன.
அரசியல் நோக்கங்களை அடிப்படையாகக் கொண்டு பொதுஜன பெரமுனவின் தலைமைத்துவ மாற்றம் தொடர்பில் கருத்துரைக்கும் அதிகாரம் அமைச்சர் விமல் வீரவன்சவுக்கு கிடையாது.
பொதுஜன பெரமுனவில் கூட்டணியமைத்துள்ள கட்சி என்ற காரணத்தினால் தலைமைத்துவம் குறித்து தீர்மானம் எடுக்கும் அதிகாரத்தை இவருக்கு எவரும் வழங்கவில்லை.
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தலைமைத்துவம் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவிடமே இருக்கும் அதில் எவ்வித மாற்றமும் கிடையாது.
அரசியல் நோக்கங்களுக்காக அமைச்சர் விமல் வீரவன்ச குறிப்பிட்டுள்ள அடிமட்ட கருத்து கவலைக்குரியது.ஆகவே இவ்விடயம் குறித்து அவர் பகிரங்க மன்னிப்பு கோர வேண்டும் என்றார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM