10.03.2010 விரோதி வருடம் மாசி மாதம் 26ஆம் நாள் புதன்கிழமை
கிருஷ்ணபட்ச தசமி திதி மாலை 5.19 வரை. அதன் மேல் ஏகாதசி திதி. பூராடம் நட்சத்திரம் மாலை 6.58 வரை. அதன் மேல் உத்திராடம் நட்சத்திரம். சிரார்த்த திதி தேய்பிறை தசமி. அமிர்த யோகம். கீழ்நோக்கு நாள். சந்திராஷ்டம நட்சத்திரங்கள் மிருகசீரிடம், திருவாதிரை. காரிய நாயனார் குரு பூஜை.
மேடம்: தாமதம், தடங்கல்
இடபம்: செலவு, பொருள் விரயம்
மிதுனம்: நிறைவு, பூர்த்தி
கடகம்: அமைதி, நிம்மதி
சிம்மம்: சாந்தம், நலம்
கன்னி: நன்மை, யோகம்
துலாம்: மேன்மை, செல்வாக்கு
விருச்சிகம்: தனம், செல்வம்
தனுசு: பதவி, அந்தஸ்து
மகரம்: யோகம், அதிர்ஷ்டம்
கும்பம்: புகழ், பõராட்டு
மீனம்: இன்பம், சுகம்
இன்று திருக் காரிய நாயனார் குரு பூஜை. திருக்கடவூரில் பிறந்தவர். காரிக் கோவை என்ற நூலைப் பாடி மூவேந்தர்கள் பால் சென்று பொருள் ஈட்டி, சிவாலயங்கள் பல அமைத்து சீர்மையுடையவர். திருக்கடவூரில் கோயில் கொண்டுள்ள அமிர்தகடேஸ்வரரையும் அபிராம வல்லியையும் பாமாலையாம் பூமாலையால் அல்லும் பகலும் சேவித்தவர். தம் புகழ் உடம்போடு கயிலை மலை சேர்ந்து பேரின்பம் கண்டவர். சூரியன், கேது ஆதிக்கம் கொண்ட இன்று அதிர்ஷ்ட எண்கள்: 1,2,5, 6 பொருந்தா எண்கள்: 8, 7 அதிர்ஷ்ட வர்ணங்கள்: பச்சை, மஞ்சள், பொன்னிறம்