29.11.2018 விளம்பி வருடம் கார்த்திகை மாதம் 13ஆம் நாள் வியாழக்கிழமை.
கிருஷ்ண பட்ச ஸப்தமி திதி முன்னிரவு 10.09 வரை. அதன் மேல் அஷ்டமி திதி. ஆயில்யம் நட்சத்திரம் பகல் 10.23 வரை. பின்னர் மகம் நட்சத்திரம். சிரார்த்த திதி. தேய்பிறை ஸப்தமி. சித்தாமிர்தயோகம். கீழ்நோக்கு நாள். சந்திராஷ்டம நட்சத்திரம் திருவோணம், சுபநேரங்கள் பகல் 10.45 – 11.45, ராகுகாலம் 1.30 – 3.00, எமகண்டம் 6.00 – 7.30, குளிகைகாலம் 9.00–10.30. வாரசூலம் – தெற்கு. (பரிகாரம் –தைலம்).
மேடம் : மகிழ்ச்சி, சந்தோஷம்
இடபம் : தடை, தாமதம்
மிதுனம் : சுகம், ஆரோக்கியம்
கடகம் : வரவு, லாபம்
சிம்மம் : சிக்கல், சங்கடம்
கன்னி : முயற்சி, முன்னேற்றம்
துலாம் : பகை, எதிர்ப்பு
விருச்சிகம் : வெற்றி, காரியசித்தி
தனுசு : அன்பு, ஆதரவு
மகரம் : புகழ்,பாராட்டு
கும்பம் : அமைதி, சாந்தம்
மீனம் : தடை, இடையூறு
‘ஸ்ரீ வைஷ்ணவம்’ திருவாய்மொழி பரமபக்தியில் பிறந்தவை அவை கூறுவது, ஸ்ரீ மஹா விஷ்ணுவே பராத்பரன், பரமபுருஷன், ஜகத்காரண பூதன், ஸர்வவியாபகன், ஸர்வநியாமகன், பரமகாருணிகன், ஸர்வலோக சரண்யன், ஸர்வசக்தியுக்தன், ஸத்யகாமன்,
ஆபஸ்தகன், ஸகலஆர்த்திஹரன். திருவாய்மொழி முற்றிற்று. நம்மாழ்வார் திருவடிகளே சரணம். நாளை ஸ்ரீ வைஷ்ணவத்தில் ஸ்ரீ பாஞ்சராத்ரம் தொடரும்.
(“ஒருவன் அரசனாக வாழலாம். ஆனால் அவன் மனிதனாகத்தான் மரிக்க வேண்டும்.”)
சந்திரன், சுக்கிரன் கிரகங்களின் ஆதிக்க நாள் இன்று.
அதிர்ஷ்ட எண்கள்: 7– 6
பொருந்தா எண்கள்: 9– 8–3
அதிர்ஷ்ட வர்ணம்: பச்சை.
இராமரத்தினம் ஜோதி
(தெஹிவளை ஸ்ரீ விஷ்ணு கோயில்)