09.11.2018 விளம்பி வருடம் ஐப்பசி மாதம் 23ஆம் நாள் வெள்ளிக்கிழமை.
சுக்கில பட்ச துவிதியை திதி முன்னிரவு 10. 26 வரை. அதன்மேல் திரிதியை திதி. அனுஷம் நட்சத்திரம் முன்னிரவு 10.14 வரை. பின்னர் கேட்டை நட்சத்திரம். சிரார்த்த திதி. வளர்பிறை துவிதியை, சித்தயோகம். சுபநேரங்கள் காலை 09.15 – 10.15, மாலை 4.45– 5.45. ராகுகாலம் 10.30– 12.00, எமகண்டம் 3.00 – 4.30, குளிகை காலம் 7.30 – 9.00. வாரசூலம் – மேற்கு. (பரிகாரம் –வெல்லம்). சமநோக்கு நாள். சந்திராஷ்டம நட்சத்திரங்கள் பரணி, கார்த்திகை. சுபமுகூர்த்த நாள். கந்தசஷ்டி விரதம். சந்திரதரிசனம். பூசலார் நாயனார் குருபூஜை. யமத்துவிதியை.
மேடம் : நன்மை, அதிர்ஷ்டம்
இடபம் : வெற்றி, யோகம்
மிதுனம் : செலவு, பற்றாக்குறை
கடகம் : அமைதி, தெளிவு
சிம்மம் : பணம், பரிசு
கன்னி : கவனம், எச்சரிக்கை
துலாம் : கீர்த்தி, புகழ்
விருச்சிகம் : விரயம், செலவு
தனுசு : நிறைவு, பூர்த்தி
மகரம் : புகழ், பாராட்டு
கும்பம் : இலாபம், லக் ஷ்மீகரம்
மீனம் : தெளிவு, அமைதி
‘ஸ்ரீ வைஷ்ணவம்’ திருவாய்மொழி. நம்மாழ்வார் எம்பெருமானின் ஐந்து நிலைகளான பரம், வியூகம், விபவம், அந்தர் யாமித்வம், அர்ச்சாவதாரம் என்பனவற்றில் அனுபவித்து பாசுரங்களாக இயற்றினார். எம்பெருமான் நாராயணனே பரன் என்றும் அவனை அடைய பிரபத்தியே வழியென்று திருவாய் மொழியில் அருளியுள்ளார். நம்மாழ்வாரைப் பற்றி ஈஸ்வர முனிகள் அருளிச் செய்த தனியன் “திருவழுதி நாடென்றும் தென்குருகூரென்றும் மருவினிய வன்பொரு நல்லென்றும் அருமறைகள் அந்தாதி செய்தானடியினையே யெப்பொழுதும் சிந்தியாய் நெஞ்சே தெளிந்து”. ( தொடரும்)
(“எவராலும் வெல்லமுடியாத இதயம் இருக்கும் போது எல்லாம் போய்விட்டதே என்று கவலைப்படாதே”)
செவ்வாய், ராகு கிரகங்களின் ஆதிக்க நாள் இன்று.
அதிர்ஷ்ட எண்கள் : 5– 6
பொருந்தா எண்கள் : 2– 8
அதிர்ஷ்ட வர்ணங்கள் : சிவப்பு, நீலம்,
மஞ்சள்.
இராமரத்தினம் ஜோதி
(தெஹிவளை ஸ்ரீ விஷ்ணு கோயில்)