05.11.2018 விளம்பி வருடம் ஐப்பசி மாதம் 19 ஆம் நாள் திங்கட்கிழமை.
கிருஷ்ணபட்ச திரயோதசி திதி பின்னிரவு 11.53 வரை. பின்னர் சதுர்த்தசி திதி. அஸ்தம் நட்சத்திரம் முன்னிரவு 9.18 வரை. பின்னர் சித்திரை நட்சத்திரம். சிரார்த்த திதி தேய்பிறை திரயோதசி. சித்தயோகம். சமநோக்கு நாள். சந்திராஷ்டம நட்சத்திரங்கள் பூரட்டாதி, உத்திரட்டாதி. சுபநேரங்கள் காலை 9.15– 10.15, மாலை 4.45– 5.45, ராகு காலம் 7.30– 9.00, எமகண்டம் 10.30– 12.00 குளிகை காலம் 1.30– 3.00, வாரசூலம் கிழக்கு. (பரிகாரம்– தயிர்) கிருஷ்ணபட்ச ஸோம மகா பிரதோஷம். சுபமுகூர்த்த தினம். மாத சிவராத்திரி. தனிய நாள். யமதீபம். தன்வந்ரி ஜெயந்தி. இரவில் நரக சதுர்த்தசி ஸ்நானம். (பின்னிரவு)
மேடம் : அமைதி, மகிழ்ச்சி
இடபம் : நன்மை, அதிர்ஷ்டம்
மிதுனம் : அன்பு, பாசம்
கடகம் , நற்செயல், பாராட்டு
சிம்மம் : வெற்றி, யோகம்
கன்னி :காரியசித்தி,அனுகூலம்
துலாம் : கவனம், எச்சரிக்கை
விருச்சிகம் : அன்பு, ஆதரவு
தனுசு : சுகம், ஆரோக்கியம்
மகரம் : தனம், சம்பத்து
கும்பம் : பிரயாணம், செலவு
மீனம் : அமைதி, சாந்தம்
ஸ்ரீ வைஷ்ணவம் “திருவாய் மொழி” பன்னிரு ஆழ்வார்கள் அருளிச் செய்த நாலாயிரம் திவ்ய பிரபந்தம் ஆன்மிக உலகுக்கு ஒரு பெரும் பொக்கிஷம். நாலாயிரம் பிரபந்தம் என்னும் தமிழ் வேதத்தின் மணிமாலையில் திருவாய் மொழி நடுக்கல்லாகப் பிரகாசிக்கின்றது. ஸ்ரீ வைஷ்ணவத்தின் பூர்வாச்சாரியார்களால் வியாக்கியானம் செய்யப்பட்டு திருவரங்கப் பெருமானாலேயே புகழ்ந்து பாடும் சிறப்பு திருவாய் மொழிக்கு உண்டு. எம்பெருமான் இராமாயணத்தை யவகுசர்கள் சொல்லிக் கேட்டான். திருவாய் மொழியை பிராட்டியுடன் கேட்டு அனுபவித்ததால் திருவாய் மொழிக்கு தனிச் சிறப்பு. சாம வேதத்தின் சாரமான திருவாய் மொழி இனிவரும் நாட்கள் தொடரும்.
(“மனசாட்சி நீதிபதியாயிருந்து தண்டனை தருமுன் நண்பனாயிருந்து எச்சரிக்கை செய்யும்”) –கதே
புதன், செவ்வாய் கிரகங்களின் ஆதிக்க நாளின்று.
அதிர்ஷ்ட எண்கள்: 5, 9
பொருந்தா எண்கள்: 2, 8, 1
அதிர்ஷ்ட வர்ணங்கள்: சாம்பல், சிவப்பு, நீலம்
இராமரத்தினம் ஜோதி
(தெஹிவளை ஸ்ரீ விஷ்ணு கோயில்)