30.10.2018 விளம்பி வருடம் ஐப்பசி மாதம் 13ஆம் நாள் செவ்வாய்க்கிழமை.
கிருஷ்ண பட்ச சஷ்டி திதி பகல் 2. 26 வரை. பின்னர் சப்தமி திதி. திருவாதிரை நட்சத்திரம். காலை 7.04 வரை அதன்மேல். புனர்பூசம் நட்சத்திரம். பின்னிரவு 5.31 வரை. பின்னர் பூசம் நட்சத்திரம். நட்சத்திர அவமாகம் சிரார்த்த திதிகள் தேய்பிறை சஷ்டி, ஸப்தமி. சித்தயோகம். சமநோக்குநாள். சந்திராஷ்டம நட்சத்திரம் – மூலம். சுபநேரங்கள் பகல் 10.45 – 11.45, மாலை 4.45– 5.45 ராகுகாலம் 3.00– 4.30, எமகண்டம் 9.00 – 10.30, குளிகை காலம் 12.00 – 1.30. வாரசூலம் – வடக்கு. (பரிகாரம் –பால்). சஷ்டி விரதம்– திதித்வயம்.
மேடம் : லாபம், லக்ஷ்மீகரம்
இடபம் : அன்பு, ஆதரவு
மிதுனம் : அமைதி, சாந்தம்
கடகம் : பொறுமை, நிதானம்
சிம்மம் : சண்டை, சச்சரவு
கன்னி :நற்செயல், பாராட்டு
துலாம் : திறமை, முன்னேற்றம்
விருச்சிகம் : புகழ், சாதனை
தனுசு : உற்சாகம், வரவேற்பு
மகரம் : நற்செயல், பாராட்டு
கும்பம் : லாபம், ஆதாயம்
மீனம் : புகழ், பாராட்டு
‘ஸ்ரீ மத் பாகவதம்’ எல்லா உபநிஷத்துக்களிலும் வர்ணிக்கப்படும் பகவான் ஸ்ரீமன் நாராயணன் ஸ்ரீமத் பாகவதத்தில் விஸ்தாரமாக விபரிக்கப்பட்டுள்ளார். வியாஸபகவ எம்பெருமானின் குணங்களை பரிபூரணமாக விளக்கி வர்ணித்துள்ளார். இதில் ஸ்ரீ வைஷ்ணவ அடியார்களின் சிறப்பை நாளை அறியத்தருகின்றேன். (தொடரும்….)
(“ ஒரு சொல் போதுமானால் இரு சொற்களை செலவு செய்யாதே எவ்வளவு சொல்லியும் பயன் இல்லை என்றால் ஒரு சொல்லையும் விரையமாக்காதே.”)
குரு, சுக்கிரன், கிரகங்களின் ஆதிக்க நாள் இன்று.
அதிர்ஷ்ட எண்: 9
பொருந்தா எண்கள்: 3– 6– 8
அதிர்ஷ்ட வர்ணங்கள்: பச்சை, மஞ்சள்,
இராமரத்தினம் ஜோதி
(தெஹிவளை ஸ்ரீ விஷ்ணு கோயில்)