27.10.2018 விளம்பி வருடம் ஐப்பசி மாதம் 10 ஆம் நாள் சனிக்கிழமை.
கிருஷ்ணபட்ச திரிதியை திதி முன்னிரவு 8.16 வரை. அதன் மேல் சதுர்த்தி திதி. கார்த்திகை நட்சத்திரம் பகல் 10.29 வரை. பின்னர் ரோகிணி நட்சத்திரம். சிரார்த்த திதி. தேய்பிறை திரிதியை. அமிர்தயோகம். கீழ்நோக்குநாள். சந்திராஷ்டம நட்சத்திரம் விசாகம். சுபநேரங்கள் பகல் 10.45– 11.45, மாலை 4.45– 5.45, ராகுகாலம் 9.00– 10.30, எமகண்டம 1.30– 3.00, குளிகைகாலம் 6.00– 7.30, வாரசூலம்– கிழக்கு (பரிகாரம் –தயிர்) சங்கட ஹர சதுர்த்தி விரதம்.
மேடம் : வெற்றி, அதிர்ஷ்டம்
இடபம் : நலம், ஆரோக்கியம்
மிதுனம் : கவலை, கஷ்டம்
கடகம் : லாபம், ஆதாயம்
சிம்மம் : பிணி, பீடை
கன்னி : மகிழ்ச்சி, சந்தோசம்
துலாம் : நன்மை, அதிர்ஷ்டம்
விருச்சிகம் : அமைதி, தெளிவு
தனுசு : தடை, தாமதம்
மகரம் : நோய், வருத்தம்
கும்பம் : புகழ், பெருமை
மீனம் : தடை, தாமதம்
“விஷ்ணு புராணம்” ஆண் பெருமாளம்சம், பெண் பிராட்டியம்சம் “தேவதிர்யங் மதுஷ்யேஷ புந்நாமா பகவான்ஹரி ஸ்திரி நாம் நீ லஷ்மீர் மைத்ரேய நாநயோர் வித்யதே பரம்” (வி.பு 1–8.35) மைத்ரேயநே தேவர் மிருகம் மனுஷ்யர்கள் ஆகிய ஜீவராசிகள் ஆணாக இருப்பது பகவான் வான் ஹரியின் அம்சம் பெற்றது. பெண்ணாயிருப்பது லஷ்மியின் அம்சம் பெற்றது. இவ்விருவரைத் தவிர வேறில்லை. விஷ்ணு புராணம் முற்றுபெறும்.
(“வாழ்க்கையை நீ தெரிந்து கொள்ளாமல் இருக்கும்போது மரணத்தைப் பற்றி எவ்வாறு நீ அறிவாய்?”)
செவ்வாய், குரு கிரகங்களின் ஆதிக்க நாளின்று.
அதிர்ஷ்ட எண்கள்: 5, 3, 9
பொருந்தா எண்கள்: 2, 6, 8
அதிர்ஷ்ட வர்ணங்கள்: மஞ்சள், சிகப்பு
இராமரத்தினம் ஜோதி
(தெஹிவளை, ஸ்ரீ விஷ்ணு கோயில்)