சுக்கிலபட்ச ஸப்தமி திதி மாலை 5 மணிவரை. அதன் மேல் அஷ்டமி திதி. ரோகிணி நட்சத்திரம் பகல் 1.41 வரை. பின்னர் மிருகசீரிஷம் நட்சத்திரம். சிரார்த்த திதி. வளர்பிறை. ஸப்தமி. அமிர்த சித்தியோகம். மேல் நோக்குநாள். சந்திராஷ்டம நட்சத்திரங்கள் சுவாதி, விசாகம். சுபநேரங்கள் காலை 7.30 – 8.30, மாலை 4.30 – 5.30. ராகுகாலம் 3 – 4.30. எமகண்டம் 9 – 10.30. குளிகை காலம் 12 – 1.30 வாரசூலம் – வடக்கு (பரிகாரம் – பால்).
மேடம் - நோய், வருத்தம்
இடபம் - திடம், நம்பிக்கை
மிதுனம் - பகை, விரோதம்
கடகம் - தடை, இடைஞ்சல்
சிம்மம் - வரவு, லாபம்
கன்னி - ஆசை, நஷ்டம்
துலாம் - நலம், ஆரோக்கியம்
விருச்சிகம் - லாபம், லஷ்மீகரம்
தனுசு - அன்பு, இரக்கம்
மகரம் - பிரீதி, ஜெயம்
கும்பம் - வெற்றி, அதிர்ஷ்டம்
மீனம் - சுகம், ஆரோக்கியம்
தொண்டரடிப் பொடியாழ்வார் அருளிய “திருமலை” பாசுரம் 45. “வளவெழும் தவளமாட மதுரை மாநகரந்தன்னுள் கவளமால் யானை கொன்ற கண்ணனை அரங்கமாலைத் துவளத் தொண்டாய தொல் சீர்த் தொண்டரடிப் பொடிசொல் இணையு புன் கவிதையேலுந் எம் பிராற்கு இனியவாறே” பொருளுரை: அழகு மிகுந்த வெண்ணிற மாடங்களுடைய வடமதுரையில் கவளம் கவளமாய் சோறு உண்ணும் பெருத்த குவலயாபீடம் என்ற யானையைக் கொன்ற “துவாரகா” நிலைய கண்ணனை ரங்கநாதனை குறித்து திருத்துளாய் தொண்டுக்கு தன்னை அர்ப்பணித்தவரும் இயற்கை பகவத் பக்தியில் அடிமைப்பட்டு நின்றவருமான தொண்டரடிப் பொடியாழ்வார் அருளிச் செய்த திருமாலையாகிய இப்பிரபந்தம் சில குற்றங்களைக் கொண்டிருப்பினும் இது எம்பிரானுக்கு இனியது. திருமாலை பாசுரங்கள் 45ஆம் முடிவுற்றது. (ஆழ்வார் திருவடிகளே சரணம்)
சுக்கிரன், செவ்வாய் கிரகங்களில் ஆதிக்க நாளின்று.
அதிர்ஷ்ட எண்: 6 – 9
பொருந்தா எண்: 3 – 2 – 8
அதிர்ஷ்ட வர்ணங்கள்: நீலம், சிகப்பு