09.10.2018 விளம்பி வருடம் புரட்டாதி மாதம் 23ஆம் நாள் செவ்வாய்க்கிழமை.
அமாவாஸ்யை திதி காலை 9. 50 வரை. அதன் மேல் பிரதமை திதி. அஸ்தம் நட்சத்திரம். பகல் 1.26 வரை. பின்னர் சித்திரை நட்சத்திரம். சிரார்த்த திதி வளர்பிறை. பிரதமை. சித்தயோகம். சமநோக்குநாள். சந்திராஷ்டம நட்சத்திரங்கள்– பூரட்டாதி, உத்திரட்டாதி. சுபநேரங்கள் காலை 7.45 – 8.45, மாலை 4.45 – 5.45, ராகுகாலம் 3.00 – 4.30, எமகண்டம் 9.00 – 10.30, குளிகை காலம் 12.00 – 1.30 வாரசூலம் – வடக்கு. (பரிகாரம் –பால்). தெஹிவளை ஸ்ரீ விஷ்ணு ஆலயத்தில் காலை கருடசேவை மாலை ஸ்ரீ ஆண்டாள் உற்சவம்.
மேஷம் : நன்மை, அதிர்ஷ்டம்
இடபம் : காரியசித்தி, அனுகூலம்
மிதுனம் : நோய், வருத்தம்
கடகம் : போட்டி, ஜெயம்
சிம்மம் : உயர்வு, மேன்மை
கன்னி : வரவு, லாபம்
துலாம் : தனம், சம்பத்து
விருச்சிகம் : சிக்கல், சங்கடம்
தனுசு : அன்பு, இரக்கம்
மகரம் : லாபம், லக்ஷ்மீகரம்
கும்பம் : ஜெயம், புகழ்
மீனம் : லாபம், லக்ஷ்மீகரம்
விஷ்ணு சகஸ்ர நாமத்தில் மோட்சமளித்தல் முதற்படியான ஜோதி– அர்சிராதி மார்க்கத்தில் ஒளியானவன். இரண்டாம் படியான ஸுருசி– பகலானவன். மூன்றாம் படியான ஹுதபுக்விபு– வளர்பிறையானவன். நான்காம் படி ரவி–உத்தராயண காலமாக இருப்பவன். ஐந்தாம் படி விரோசன–சூரியன் ஒளிவீசும் வருடமானவன். ஆறாம் படி சூஸுரிய—வாயு வடிவானவன். ஏழாம் படியான ஸவிதா– மழையையும் பயிரையும் தோற்றுவிப்பவன்.
(“ஒற்றுமையாக இருங்கள் ஆனால் மிகநெருக்கமாக இருக்காதீர்கள்”. –சுவாமி விவேகானந்தர்)
செவ்வாய், குரு கிரகங்களின் ஆதிக்க நாள் இன்று.
அதிர்ஷ்ட எண்கள் : 5–3–9
பொருந்தா எண்கள் : 2–6–8--
அதிர்ஷ்ட வர்ணங்கள் : மஞ்சள், சிவப்பு.
இராமரத்தினம் ஜோதி
(தெஹிவளை ஸ்ரீ விஷ்ணு கோயில்)