சுக்கிலபட்ச ஏகாதசி திதி பகல் 10.21 வரை. அதன் மேல் துவாதசி திதி. பூராடம் நட்சத்திரம். நாள் முழுவதும் நட்சத்திர திரிதினஸ் பிருக்கு. சிரார்த்த திதி வளர்பிறை. துவாதசி அமிர்தயோகம் கீழ்நோக்கு நாள். சந்திராஷ்டம நட்சத்திரம் மிருகசீரிஷம். சுபநேரங்கள் பகல் 10.45– 11.45, மாலை 4.45– 5.45, ராகுகாலம் 12.00– 1.30, எமகண்டம் 7.30– 9.00, குளிகைகாலம் 10.30– 12.00, வாரசூலம்– வடக்கு (பரிகாரம் –பால்) ஸர்வ ஏகாதசி விரதம். வாஸ்து நாள்.
மேடம் : தெளிவு, அமைதி
இடபம் : திறமை, முன்னேற்றம்
மிதுனம் : சுகம், ஆரோக்கியம்
கடகம் : சினம், பகை
சிம்மம் : முயற்சி, முன்னேற்றம்
கன்னி : பரிவு, பாசம்
துலாம் : புகழ், பாராட்டு
விருச்சிகம் : சிக்கல், சங்கடம்
தனுசு : வாழ்வு, வளம்
மகரம் : பொறுமை, அமைதி
கும்பம் : அசதி, வருத்தம்
மீனம் : புகழ், பெருமை
“பூ சூக்தம்” எம் பெருமான் ஸ்ரீமன் நாராயணனின் அவதார விசேடங்கள் எல்லாம் பூமி பிராட்டியாரிடமுள்ள பிரேமத்தை வெளியிடுவதை கம்ப நாட்டாழ்வார் “அரவாகிச் சுமத்தியால் அணியெற்றின் ஏந்துதியால், ஒரு வாயின் விழுங்குதியால், ஓரடியால் ஒளித்தியாய், திருவான நிலமகளை” (ஆரண்ய காண்டம் விராதன் வதை) பரம் பொருளின் நாயகியே இப்பூமித்தாய் என்பதை சொல்லவும் வேண்டுமோ? சொல்லாமலே விளக்குமல்லவா?”
பூசூக்தம் முற்றிற்று. நாளை ஸ்ரீ வைஷ்ணவத்தில் ஸ்ரீமத் இராமாயணம் தொடரும்.
(உங்கள் கட்டிலின் விரிப்பில் இதனை எழுதி வையுங்கள் –"காலையிலேயே எழுந்திராவிட்டால் முன்னேற மாட்டாய்")
ராகு, புதன் கிரகங்களின் ஆதிக்க நாளின்று.
அதிர்ஷ்ட எண்கள்: 1, 5
பொருந்தா எண்கள்: 8, 6
அதிர்ஷ்ட வர்ணங்கள்: மஞ்சள், வெளிர் நீலம்.
இராமரத்தினம் ஜோதி (தெஹிவளை ஸ்ரீ விஷ்ணு கோயில்)