14.08.2018 விளம்பி வருடம் ஆடி மாதம் 29 ஆம் நாள் செவ்வாய்க்கிழமை.
சுக்கிலபட்ச திரிதியை திதி பகல் 10.05 வரை. அதன் மேல் சதுர்த்தி திதி. உத்திரம் நட்சத்திரம் முன்னிரவு 10.27 வரை. பின்னர் அஸ்தம் நட்சத்திரம். சிரார்த்த திதி: வளர்பிறை சதுர்த்தி. அமிர்த சித்தயோகம். மேல்நோக்கு நாள். சந்திராஷ்டம நட்சத்திரங்கள்: சதயம், பூரட்டாதி. சுபநேரங்கள்: பகல் 10.45– 11.45, மாலை 4.45– 5.45, ராகு காலம் 3.00– 4.30, எமகண்டம் 9.00– 10.30, குளிகை காலம் 12.00– 1.30, வாரசூலம்– வடக்கு (பரிகாரம்– பால்) தூர்வா கணபதி விரதம். நாகசதுர்த்தி விரதம். சுக்கிலபட்ச சதுர்த்தி விரதம்.
மேடம் : ஜெயம், புகழ்
இடபம் : நட்பு, உதவி
மிதுனம் : புகழ், பெருமை
கடகம் : ஓய்வு, அசதி
சிம்மம் : அன்பு, ஆதரவு
கன்னி : பாசம், அன்பு
துலாம் : முயற்சி, முன்னேற்றம்
விருச்சிகம் : விவேகம், வெற்றி
தனுசு : ஏமாற்றம், கவலை
மகரம் : பொறுமை, அமைதி
கும்பம் : ஆக்கம், நிறைவு
மீனம் : புகழ், பெருமை
ஸ்ரீசூக்தம், ஸ்ரீமகாலஷ்மி அழகு தெய்வம், அன்பின் இருப்பிடம், கருணைக் கடல், காருண்ய தேவதை, பொறுமையின் இலக்கணம், அமைதியின் வடிவம், அடக்கத்தின் உருவம். சாந்தஸ்வரூபிணி, சாத்வீக குணவதி, ஜகந்மாதா, சேதனர்களை இரட்சிப்பதற்காகப் பெருமாளைவிட்டு கணநேரமும் “அகல கில்லேன்” என்று அவருடைய வத்ஸத் தலதில் பெரிய பிராட்டி இவள். பக்தர்களின் தவறைப் பொருட்படுத்தாமல் அவர்கள் கைங்கரியத்தை ஒன்றுக்குப் பத்தாகக் கூட்டி பெருமானிடம் கூறி பெருமாள் அவர்களை இரட்சிக்கும் பேறு பார்த்து சந்தோஷப்படும் பெரிய பிராட்டியரே! ஜகன் மாதாவான ஸ்ரீ மகாலக் ஷ்மி எங்கள் தாயே! சரணம். நாளை பூசூக்த மந்திரத்தின் சுருக்கம். பூமிதேவியின் பெருமை.
புதன், சுக்கிரன் கிரகங்களின் ஆதிக்க நாளின்று.
அதிர்ஷ்ட எண்கள்: 9, 5
பொருந்தா எண்கள்: 3, 8
அதிர்ஷ்ட வர்ணங்கள்: பச்சை, நீலம், சிவப்பு
இராமரத்தினம்ஜோதி
(தெஹிவளை ஸ்ரீ விஷ்ணு கோயில்)