13.08.2018 விளம்பி வருடம் ஆடி மாதம் 28 ஆம் நாள் திங்கட்கிழமை.
சுக்கிலபட்ச துவிதியை திதி பகல் 11.58 வரை. பின்னர் திருதியை திதி. பூரம் நட்சத்திரம் முன்னிரவு 11.24 வரை. பின்னர் உத்திரம் நட்சத்திரம். சிரார்த்த திதி: வளர்பிறை திரிதியை. சித்தயோகம். கீழ்நோக்கு நாள். சந்திராஷ்டம நட்சத்திரங்கள்: அவிட்டம், சதயம். சுபநேரங்கள்: காலை 6.15 – 7.15, மாலை 4.45 – 5.45, ராகுகாலம் 7.30 – 9.00, குளிகை காலம் 1.30 – 3.00, எமகண்டம் 10.30 – 12.00, வாரசூலம் – கிழக்கு (பரிகாரம் – தயிர்) திருவாடிப்பூரம். ஸ்ரீஆண்டாள் திருநட்சத்திரம். ஸ்ரீவில்லிபுத்தூர், ஸ்ரீஆண்டாள் பெருந்தேரில் புறப்பாடு. ஸ்வர்ண கௌரி விரதம்.
மேடம் : ஆதாயம், இலாபம்
இடபம் : நிறைவு, ஆக்கம்
மிதுனம் : அமைதி, தெளிவு
கடகம் : போட்டி, ஜெயம்
சிம்மம் : நன்மை, யோகம்
கன்னி : வெற்றி, அதிர்ஷ்டம்
துலாம் : புகழ், பெருமை
விருச்சிகம் : சினம், பகை
தனுசு : தொல்லை, சங்கடம்
மகரம் : அமைதி, சாந்தம்
கும்பம் : உயர்வு மேன்மை
மீனம் : ஊக்கம், உயர்வு
புருஷ சூக்தம் “அஜாயமாநோ பஹுதா விஜாயதே” இறைவன் பிறப்பற்றவன். ஆனாலும் பிறக்கின்றான். பிறப்பற்றவன் எவ்வாறு பிறக்க முடியும்? கர்மாக்கள் கழுத்தைப் பிடித்துத் தள்ள நாம் பிறக்கின்றோம். ஆனால் இறைவனோ ஆசைப்பட்டு பல அவதாரங்களை எடுக்கின்றான் என்பது புருஷ சூக்த மந்திரங்களில் உறுதியாகிவிட்டது. “ஹ்ரீச்சதே லஷ்மிச்ச பத்ந்யெள இஷ்டம்ம நிஷாண சுமும்ம நிஷாண ஸர்வ மநிஷாண” (உனக்கு ஸ்ரீதேவி, பூமி தேவிகள் பத்தினி ஆவார்கள். இஷ்டத்தை கொடும். எல்லா கைங்கரியங்களையும் கொடும். சகல ரட்சகனாகவும் பலப் பிரதானனாகவும் உள்ளாய். லஷ்மிநாதனான நீயே பரமபுருஷன். ஒருவன் என்று புருஷசூக்த மந்திரம் நிர்ணயித்துள்ளது.
ராகு, புதன் கிரகங்களின் ஆதிக்க நாள் இன்று. அதிர்ஷ்ட எண்கள்: 1, 5
பொருந்தா எண்கள்: 8, 6
அதிர்ஷ்ட வர்ணங்கள்: சாம்பல், வெளிர் நீலம் இராமரத்தினம் ஜோதி
(தெஹிவளை ஸ்ரீ விஷ்ணு கோயில்)