26.07.2018 விளம்பி வருடம் ஆடி மாதம் 10 ஆம் நாள் வியாழக்கிழமை.
வளர்பிறை சதுர்த்தசி திதி பின்னிரவு12.29 வரை. பின்னர் பௌர்ணமி திதி, பூராடம் நட்சத்திரம் முன்னிரவு 11.12 வரை. பின்னர் உத்திராடம் நட்சத்திரம். சிரார்த்த திதி வளர்பிறை சதுர்த்தசி சித்தயோகம். கரிநாள். சுபம் விலக்குக. கீழ்நோக்குநாள் சந்திராஷ்டம நட்சத்திரங்கள். ரோகிணி, மிருகசீரிடம். சுபநேரங்கள்: பகல் 10.45– 11.45, ராகுகாலம் 1.30– 3.00 எமண்டம் 6.00– 7.30, குளிகைகாலம் 9.00– 10.30, வாரசூலம்– தெற்கு (பரிகாரம்– தைலம்) பவித்திர சதுர்த்தசி.
மேடம் : தெளிவு, அமைதி
இடபம் : சிக்கல், சங்கடம்
மிதுனம் : உயர்வு, மேன்மை
கடகம் : தொல்லை, சங்கடம்
சிம்மம் : போட்டி, ஜெயம்
கன்னி : நலம், ஆரோக்கியம்
துலாம் : விருத்தி, யோகம்
விருச்சிகம் : அமைதி, சாந்தம்
தனுசு : முயற்சி, முன்னேற்றம்
மகரம் : பொறுமை, நிதானம்
கும்பம் : நன்மை, யோகம்
மீனம் : லாபம், லக்ஷ்மீகரம்
திருமழிசையாழ்வார் பாசுரம் ‘இன்றாக நாளையேயாக இனிச்சிறிது நின்றாக நின்னருள் என் பாலதே– நன்றாக நான் உன்னையன்றியிலேன் கண்டாய் நாராயணனே, நீ என்னையன்றி இல்லை. பொருள்: நாராயணா! மோட்சமான ஸ்ரீ வைகுண்டத்தை எனக்கு இன்று தருவாய் என்று எண்ணுகிறேன். இன்று முடியாமல் போனால் நாளை கொடுப்பாய். ஆனால் என்றாவது ஒருநாள் கொடுத்தேயாக வேண்டும். ஏனென்றால் நான் உன்னையன்றி இல்லை. அதுபோல் நீயும் நான் இன்றி இல்லை. நாளை கடோப நிஷத்தில் ஸ்ரீ வைஷ்ணவா. தொடரும்…..
சனியின் பூரண ஆதிக்கம் கொண்ட இன்று, (பிறப்பு எண் 8, விதி எண் 8)
அதிர்ஷ்ட எண்கள்: 5, 6
பொருந்தா எண்கள்: 8, 7
அதிர்ஷ்ட வர்ணங்கள்: மஞ்சள், பச்சை, நீலம்
இராமரத்தினம் ஜோதி
(தெஹிவளை ஸ்ரீ விஷ்ணு கோயில்)