அமாவஸ்ஸை திதி காலை 8.19 வரை. பின்னர் பிரதமை திதி மறுநாள் காலை 6.10 வரை. அதன் மேல் துவிதியை திதி. பூரட்டாதி நட்சத்திரம் முன்னிரவு 10.36 வரை அதன் மேல் உத்திரட்டாதி நட்சத்திரம் சூரிய கிரஹணம் அமிர்த சித்த யோகம் கீழ் நோக்கு நாள். சந்திராஷ்டம நட்சத்திரங்கள் ஆயில்யம்,மகம். சுப நேரங்கள் காலை 9.30 – 10.30 மாலை 4.30 – 5.30. ராகுகாலம் 12.00 – 1.30 எமகண்டம் 7.30 – 9.00. குளிகை காலம் 10.30 – 12.00. வாரசூலம் – வடக்கு (பரிகாரம் – பால்)
மேடம் சுகம், ஆரோக்கியம்
இடபம் வரவு, லாபம்
மிதுனம் உயர்வு, மேன்மை
கடகம் போட்டி, ஜெயம்
சிம்மம் புகழ், பெருமை
கன்னி முன்னேற்றம், முயற்சி
துலாம் விவேகம், வெற்றி
விருச்சிகம் உயர்வு, உழைப்பு
தனுசு அமைதி, தெளிவு
மகரம் லாபம், லஷ்மீகரம்
கும்பம் வெற்றி, யோகம்
மீனம் உயர்வு, ஊக்கம்
தொண்டரடிப் பொடியால்வார் அருளிய “திருமாலை” பாசுரம் 39” அடிமையில் குடிமையில்லா அடியரை உகத்திபோலும் அரங்கமா நகருள்ளானே” பொருளுரை திருமுடியில் துளசிமாலையை அணிந்தவனே! உனக்கு தொண்டு செய்யாத, ஆனால் நான்கு வேதங்களையும் படித்த வேதியர்களை விட குடிப்பிறப்பு ஒழுக்கம் குணம் இவற்றில் தாழ்ந்து இருப்பினும் உனக்கு தன்னை அர்ப்பணித்துக் கைங்கைர்யம் செய்தவர்களிடமே நீ அன்பு வைக்கின்றாய் என்பதை அரங்கனே யாள் கண் கூடாகக் காண்கிறேன். (ஆழ்வார் திருவடிகளே சரணம்)
செவ்வாய் குரு கிரகங்களில் ஆதிக்க நாளின்று.
அதிர்ஷ்ட எண்: 5–3–9
பொருந்தா எண்கள்: 2 – 6 – 8
அதிர்ஷ்ட வர்ணங்கள்: மஞ்சள், சிவப்பு