13.06.2018 விளம்பி வருடம் வைகாசி மாதம் 30 ஆம் நாள் புதன்கிழமை.
அமாவாஸ்யை திதி பின்னிரவு 2.12 வரை. அதன்மேல் சுக்கிலபட்ச பிரதமை திதி. ரோகினி நட்சத்திரம் மாலை 5.20 வரை. பின்னர் மிருகசீரிஷம் நட்சத்திரம். சிரார்த்த திதி அமாவாஸ்யை சித்தயோகம். மேல்நோக்குநாள்.சந்திராஷ்டம நட்சத்திரங்கள்: விசாகம், அனுஷம். சுபநேரங்கள்: பகல் 11.30 – 12.00, மாலை 4.30 – 5.30, ராகுகாலம் 12.00 – 1.30, எமகண்டம் 7.30 – 9.00, குளிகைகாலம் 10.30 – 12.00, வாரசூலம்– வடக்கு (பரிகாரம்–பால்).
மேடம் : நன்மை, அதிர்ஷ்டம்
இடபம் : அமைதி, தெளிவு
மிதுனம் : செலவு, விரயம்
கடகம் : லாபம், ஆதாயம்
சிம்மம் : குழப்பம், சஞ்சலம்
கன்னி : போட்டி, ஜெயம்
துலாம் : சிக்கல், சங்கடம்
விருச்சிகம் : துணிவு, வீரம்
தனுசு : ஜெயம், புகழ்
மகரம் : உயர்வு, மேன்மை
கும்பம் : ஊக்கம், உயர்வு
மீனம் : அன்பு, ஆதரவு
இன்று ரோகிணி நட்சத்திரம். கண்ணன் அவதார திருநட்சத்திரம். "கொண்டல் வண்ணனை கோவலனாய் வெண்ணெய்யுண்ட வாயன் என் உள்ளங் கவர்ந்தானை அண்டர்கோன் அணிவரங்கள் என்னமுதினைக் கண்ட கண்கள் மற்றொன்றினை காணாவே. இன்று துவாரகா நிலைய வாசன் கண்ணனை வழிபடல் நன்று. கண்ணன் கழலினை நண்ணும் மணமுடையீர் கண்ணனையே காண்க நம் கண்"
("அறிவு தலைக்கு கிரீடம்;அடக்கம் காலுக்கு செருப்பு")
ராகு,குரு கிரகங்களின் ஆதிக்க நாளின்று.
அதிர்ஷ்ட எண்கள் : 1, 5, 9, 3
பொருந்தா எண்கள் : 2, 8
அதிர்ஷ்ட வர்ணங்கள் : மஞ்சள், கலந்த வர்ணங்கள்
இராமரத்தினம் ஜோதி
(தெஹிவளை ஸ்ரீவிஷ்ணு கோயில்)