30.05.2018 விளம்பி வருடம் வைகாசி மாதம் 16 ஆம் நாள் புதன்கிழமை.
கிருஷ்ண பட்ச பிரதமை திதி முன்னிரவு 9.41 வரை. பின்னர் துவிதியை திதி. கேட்டை நட்சத்திரம் பின்னிரவு 3.30 வரை. பின்னர் மூலம் நட்சத்திரம். சிரார்த்த திதி தேய்பிறை பிரதமை. சித்த யோகம். கரிநாள் (சுபம் விலக்குக). சமநோக்கு நாள். சந்திராஷ்டம நட்சத்திரம்: கார்த்திகை. சுபநேரங்கள்: காலை 9.30–10.30, மாலை 4.30– 5.30, ராகுகாலம் 12.00–1.30, எமகண்டம் 7.30–9.00, குளிகை காலம் 10.30– 12.00, வாரசூலம்–வடக்கு. (பரிகாரம் –பால்). ஜேஷ்ட பகுனப் பிரதமை. நாளை திருஞானசம்பந்த நாயனார் குருபூஜை.
மேடம் : உயர்வு, மேன்மை
இடபம் : அன்பு, பாசம்
மிதுனம் : சுகம், ஆரோக்கியம்
கடகம் : லாபம், லக் ஷ்மீகரம்
சிம்மம் : அன்பு, பாசம்
கன்னி : முயற்சி, முன்னேற்றம்
துலாம் : நன்மை, முன்னேற்றம்
விருச்சிகம் : வரவு, லாபம்
தனுசு : தடை, தாமதம்
மகரம் : பக்தி, அனுக்கிரகம்
கும்பம் : அமைதி, தெளிவு
மீனம் : சுபம், மங்களம்
இன்று கேட்டை நட்சத்திரம். ஸ்ரீவராஹப் பெருமாளை வழிபடல் நன்று. சகல காரியங்களிலும் சித்திபெற உங்கள் காரியங்களை தாமதம் செய்யாதீர்கள். “Do It Now” “உறங்குவது போலும் சாக்காடு. உறங்கி விழிப்பதும் போல் பிறப்பு” திருக்குறள் 339. உலகம் நிலையில்லாதது. என்ன நேரத்தில், எந்நேரத்தில் என்ன நிகழும் என்பதை யாரும் அறுதியிட்டு கூறமுடியாது. மின்னல் மின்னும் ஒளிப்பிளம்பாய் காட்சியளிக்கும் அதன் ஆயுள் ஒரு கணமே. அத்தகைய மின்னல் போன்றதே நம் வாழ்வு. உடனுக்குடன் விரைந்து செயற்படுங்கள். “மின்னின் நிலையில் மன்னுயிர் யாக்கைகள் என்னுமிடத்து, இறை உன்னுமின் நீரே” பொருள் பொதிந்த அருளுரை. வராஹப் பெருமாளை இன்று வழிபடுங்கள். குரு, சூரியன் கிரகங்களின் ஆதிக்க நாளின்று.
அதிர்ஷ்ட எண்கள்: 1, 5
பொருந்தா எண்கள்: 8, 9
அதிர்ஷ்ட வர்ணங்கள்: மஞ்சள், இளஞ் சிகப்பு.
இராமரத்தினம் ஜோதி
(தெஹிவளை ஸ்ரீ விஷ்ணு கோயில்)