கிருஷ்ணபட்ச ஸப்தமி திதி பிற்பகல் 1.04 வரை. பின்னர் அஷ்டமி திதி. அனுஷம் நட்சத்திரம் முன்னிரவு 11.53 வரை. பின்னர் கேட்டை நட்சத்திரம். சிரார்த்த திதி. தேய்பிறை. அஷ்டமி சித்தயோகம். சமநோக்கு நாள். சந்திராஷ்டம நட்சத்திரங்கள் அஸ்வினி, பரனி. சுப நேரங்கள் காலை 10.30 –11.30, மாலை 4.30 – 5.30. ராகுகாலம் 3.00 – 4.30. எமகண்டம் 9.00 – 10.30. குளிகை காலம் 12.00 – 1.30. வார சூலம் – வடக்கு (பரிகாரம் பால்).
மேடம் : அன்பு, ஆதரவு
இடபம் : நிறைவு, பூர்த்தி
மிதுனம் : நன்மை, யோகம்
கடகம் : புகழ், பெருமை
சிம்மம் :வெற்றி, அதிர்ஷ்டம்
கன்னி : விவேகம், வெற்றி
துலாம் : நட்பு, உதவி
விருச்சிகம் : உயர்வு, மேன்மை
தனுசு : தடை, தாமதம்
மகரம் : போட்டி, ஜெயம்
கும்பம் : பகை, விரோதம்
மீனம் : வரவு, இலாபம்
தொண்டரடிப் பொடியாழ்வார் அருளிய திருமலை பாசுரம் 31. “தவத்துள்ளார் தம்மில்லேன். தனம் படைத்தாரில்லேன். அவத்தமே பிறவி தந்தாய் அரங்கமா நகருளானே” பொருளுரை: திருவரங்கத்தில் சயனித்திருப்பவனே! உன்னை அடையத் தவம் புரிபவர்களில் ஒருவனல்லேன். செல்வந்தனாக இருந்தால் தானம் செய்திருப்பேன். அதற்கும் தகுதி இல்லை! உப்பு நீர் போல சுற்றத்தாருக்கு உதவாதவனாகிவிட்டேன். சிவந்த வாயையுடைய நங்கையருக்கும் கள்வனானேன். எனக்கு நீ அளித்த பிறவி வீணாகிவிட்டது. அரங்கமாநகருள்ளானே! (ஆழ்வார் திருவடிகளே சரணம்) (“ஒரு பள்ளிக்கதவு திறக்கப்படும் போது சிறைச்சாலை கதவு மூடப்படுகின்றது) சூரியன், ராகு கிரகங்களில் ஆதிக்க நாளின்று.
அதிர்ஷ்ட எண்கள்: 1– 5
பொருந்தா எண்: 8
அதிர்ஷ்ட வர்ணங்கள்: மஞ்சள், வெளிர் நீலம்