10.05.2018 விளம்பி வருடம் சித்திரை
மாதம் 27 ஆம் நாள் வியாழக்கிழமை.
கிருஷ்ணபட்ச தசமி திதி முன்னிரவு 9.02 வரை. அதன்மேல் ஏகாதசி திதி. சதயம் நட்சத்திரம் காலை 9.57 வரை. பின்னர் பூரட்டாதி நட்சத்திரம். சிரார்த்த திதி. தேய்பிறை தசமி. மரணயோகம் காலை 9.57 வரை. அதன்மேல் சித்தயோகம். மேல்நோக்குநாள். சந்திராஷ்டம நட்சத்திரம் மகம். சுபநேரங்கள்: பகல் 10.30 – 11.30, பிற்பகல் 12.30– 1.30, ராகுகாலம் 1.30 – 3.00, எமகண்டம் 6.00– 7.30, குளிகைகாலம் 9.00 – 10.30, வாரசூலம் –தெற்கு (பரிகாரம் – தைலம்)
மேடம் : இன்பம், மகிழ்ச்சி
இடபம் : போட்டி, ஜெயம்
மிதுனம் : செலவு, விரயம்
கடகம் : புகழ், பெருமை
சிம்மம் : சிரமம், தடை
கன்னி : பொறுமை, நிதானம்
துலாம் : விவேகம், வெற்றி
விருச்சிகம் : நஷ்டம், கவலை
தனுசு : தோல்வி, கவலை
மகரம் : புகழ், பாராட்டு
கும்பம் : தடை, இடையூறு
மீனம் : இலாபம், லஷ்மீகரம்
“உலகமே என் தாய் நாடு. நன்மை செய்வதே என் சமயம்” தாமஸ்பெயின். இதனை நம் இந்துமதம் “உலகம் உவப்ப” என்று திருமுருகாற்றுப்படையும், “நனந்தலை உலகம்” என்று முல்லைப்பாட்டும், “வையகம்” என்று நெடுநல்வாடையும், “வையம் தகளியா” என்று முதலாழ்வார் பாசுரமும் வையத்து வாழ்வீர் காண் என்று ஸ்ரீஆண்டாள் திருப்பாவையும், “ஆதிபகவன் முதற்றே உலகு” என்று திருக்குறளும், "உலகம் யாவையும்" என்று கம்பரும் “உலகெலாம் உணர்ந்து ஓதுதற்கரியவன்” என்று சேக்கிழாரும், “உலகு ஏழும் பெற்ற சீரபிராமி” என்று அபிராமி அந்தாதியும் தொடங்குகின்றது. தமிழ் இலக்கியங்களின் தலையாய பண்புகள் இரண்டு. அவை உலகளாவிய நோக்கில் தமிழை அணுகுவது (International Perspective) மற்றது அறிவியல் நெறிமுறை (Scientific Approach) இந்த சிறப்பு நம் தமிழை விட வேறு எந்த மொழியாலும் விவரிக்க முடியாது. (சொல்லிக் கொடுத்த காளிக்கு நன்றி)
சூரியன், சனிக் கிரகங்களின் ஆதிக்க நாளின்று.
அதிர்ஷ்ட எண்கள் : 1, 5
பொருந்தா எண்கள் : 8, 7
அதிர்ஷ்ட வர்ணங்கள் : மஞ்சள், வெளிர் நீலம்
இராமரத்தினம் ஜோதி
(தெஹிவளை ஸ்ரீ விஷ்ணு கோயில்)