30.03.2018 ஏவிளம்பி வருடம் பங்குனி மாதம் 16 ஆம் நாள் வெள்ளிக்கிழமை.
சுக்கிலபட்ச சதுர்த்தசி திதி இரவு 7.32 வரை. பின்னர் பௌர்ணமி திதி. பூரம் நட்சத்திரம் காலை 7.06 வரை. அதன்மேல் உத்திரம். சிரார்த்த திதி, வளர்பிறை சதுர்த்தசி. சித்தயோகம். சமநோக்கு நாள். சந்திராஷ்டம நட்சத்திரம்: அவிட்டம். சுபநேரங்கள்: காலை 9.30– 10.30, மாலை 4.30– 5.30, ராகு காலம் 10.30– 12.00, எமகண்டம் 3.00– 4.30, குளிகை காலம் 7.30– 9.00, வாரசூலம் –மேற்கு (பரிகாரம்– வெல்லம்) பங்குனி உத்திரம். மதனச் சதுர்த்தசி. முருகப்பெருமானை வழிபடல் நன்று.
மேடம் : நம்பிக்கை, காரியசித்தி
இடபம் : புகழ், பெருமை
மிதுனம் : சுகம், ஆரோக்கியம்
கடகம் : உயர்வு, மேன்மை
சிம்மம் : தெளிவு, மகிழ்ச்சி
கன்னி : சுபம், மங்களம்
துலாம் : அன்பு, இரக்கம்
விருச்சிகம் : பிரயாணம், செலவு
தனுசு : பகை, பயம்
மகரம் : அமைதி, சாந்தம்
கும்பம் : குழப்பம், சஞ்சலம்
மீனம் : அமைதி, தெளிவு
அதிர்ஷ்ட ரேகையும் காலக்கணித அதிர்ஷ்ட ரேகை, வாழ்வில் அதிர்ஷ்டம் காட்டும் ரேகை. ஆயுள் ரேகை கீழ் தோன்றும் கங்கணமேட்டை அடிப்பாகமாகத் தொட்டு மேலே நோக்கிச் செல்லும் ரேகை அதிர்ஷ்ட ரேகை எனப்படும். எல்லா விதமான அதிர்ஷ்டமும் இந்த ரேகை அளிக்கும்.
(“நல்லவற்றை பாறையில் எழுது. தீயவற்றை பனிக்கட்டியில் எழுது”)
குரு, சனி கிரகங்களின் ஆதிக்க நாளின்று.
அதிர்ஷ்ட எண்கள்: 1, 5
பொருந்தா எண்கள்: 6, 8
அதிர்ஷ்ட வர்ணங்கள்: மஞ்சள், இளஞ்சிவப்பு
இராமரத்தினம் ஜோதி
(தெஹிவளை ஸ்ரீ விஷ்ணு கோயில்)