13.03.2018 ஏவிளம்பி வருடம் மாசி மாதம் 29 ஆம் நாள் செவ்வாய்க்கிழமை.
கிருஷ்ணபட்ச ஏகாதசி திதி பிற்பகல் 2.43 வரை. அதன் மேல் துவாதசி திதி. உத்தராடம் நட்சத்திரம் பிற்பகல் 3.27வரை. பின்னர் திருவோணம் நட்சத்திரம். அதிதி. திதித் வயம். மேல்நோக்கு நாள். சந்திராஷ்டம நட்சத்திரங்கள் திருவாதிரை, புனர்பூசம். சுபநேரங்கள் பகல் 10.30– 11.30, மாலை 4.30– 5.00, ராகு காலம் 3.00 –4.30, எமகண்டம் 9.00– 10.30, குளிகை காலம் 12.00– 1.30. வாரசூலம்– வடக்கு (பரிகாரம் – பால்) கிருஷ்ணபட்ச ஸர்வ ஏகாதசி விரதம், திருவோண விரதம். ஸ்ரீமன்நாராயணனை உபவாசமிருந்து வழிபடல் நன்று.
மேடம் : ஓய்வு, அசதி
இடபம் : குழப்பம், சஞ்சலம்
மிதுனம் : சுகம், ஆரோக்கியம்
கடகம் : வெற்றி, அதிர்ஷ்டம்
சிம்மம் : சுகம், ஆரோக்கியம்
கன்னி : உதவி, நட்பு
துலாம் : தெளிவு, அமைதி
விருச்சிகம் : தனம், சம்பத்து
தனுசு : முயற்சி, முன்னேற்றம்
மகரம் : அன்பு, பாசம்
கும்பம் : பகை, விரோதம்
மீனம் : அன்பு, பாசம்
குருமேடும் அதன் அதிகாரமும் “நாள் காட்டும் உடுக்கை. அன்னம் அணிவகை காட்டும். அன்னார் ஆள்காட்டும் விரலின் கீழே ஆனது குரு மேடு” ஒருவர் ஆள் காட்டி விரல் அடி அங்குலத்திற்கு கீழ் ஆயுள் ரேகை முடி பாகத்திற்கு மேல் தோன்றும் இடப் பாகம் குருமேடு எனப்படும். இம்மேடு மன்மதன் அழகு, தேக அமைப்பு, மேன்மை, பட்டம், பதவி, கீர்த்தி, தொழில், வியாபாரம், ஆகாரம், அலங்காரம், ஆடை அணி வாகனம், சிப்பந்தி, பால், பசு, கன்று போன்ற விளக்கங்கள் காட்டக்கூடிய மேடாகும். நாளை சனிமேடு தொடரும்.
(“நன்மை செய்யுங்கள், யாருக்கென்று மட்டும் கேட்காதீர்கள்”)
ராகு, செவ்வாய் கிரகங்களின் ஆதிக்க நாளின்று.அதிர்ஷ்ட எண்கள்: 5, 6, 3, 9
பொருந்தா எண்கள்: 2, 8, 4, 1
அதிர்ஷ்ட வர்ணங்கள்: மஞ்சள், வெளிர் நீலம்
இராமரத்தினம் ஜோதி
(தெஹிவளை ஸ்ரீ விஷ்ணு கோயில்)