07.03.2018 ஏவிளம்பி வருடம் மாசி மாதம் 23 ஆம் நாள் புதன்கிழமை.
கிருஷ்ண பட்ச சஷ்டி திதி பின்னிரவு 5.27 மணி வரை. அதன் மேல் ஸப்தமி திதி. விசாகம் நட்சத்திரம் பின்னிரவு 11.47வரை. பின்னர் அனுஷம் நட்சத்திரம். சிரார்த்த திதி தேய்பிறை சஷ்டி. சித்தயோகம். கீழ்நோக்குநாள். சந்திராஷ்டம நட்சத்திரங்கள்: அஸ்வினி, பரணி. சுபநேரங்கள்: காலை 10.30–11.30, மாலை 4.30– 5.30, ராகு காலம் 12.00– 1.30, எமகண்டம் 7.30–9.00, குளிகைகாலம் 10.30–12.00, வாரசூலம் –வடக்கு (பரிகாரம்– பால்) கிருஷ்ணபட்ச சஷ்டி விரதம். விசாகம் நட்சத்திரம். முருகப்பெருமானை வழிபடல் நன்று.
மேடம் : நோய், வருத்தம்
இடபம் : வெற்றி, அதிர்ஷ்டம்
மிதுனம் : கவனம், எச்சரிக்கை
கடகம் : காரியசித்தி, அனுகூலம்
சிம்மம் : புகழ், பெருமை
கன்னி : ஜெயம், புகழ்
துலாம் : அமைதி, சாந்தம்
விருச்சிகம் : புகழ், பாராட்டு
தனுசு : ஈகை, புண்ணியம்
மகரம் : பணம், பரிசு
கும்பம் : மறதி, விரயம்
மீனம் : பணம், பரிசு
ஒருவர் இறந்துவிட்டால் அவர் ஜீவன் பிரிந்துவிட்டால், அவர் உடல் அக்னிக்கு உணவாக போவதால், அவர் பூதவுடலை நெய் தேய்த்து நன்கு கழுவி, குளிப்பாட்டி, சந்தனம் தேய்த்து, வாசனை திரவியங்கள் பூசி புத்தாடை அணிவித்து 12 மணித்தியாலங்களில் அக்னியில் இடவேண்டும் என்கிறது அபரகர்மா சாஸ்திர விதி. ஓர் உயிர் தாயின் கருவறையில் இருந்து பிறக்கும்போது தாயின் கருப்பையில் உள்ள "பன்னீர்குடத்தை" உடைத்துக்கொண்டு பிறக்கின்றது. அதுபோல் மீண்டும் அக்னியில் நம் உடலை சமர்ப்பிக்கும்போது தன் உடல் மறையும்போது தன் புத்திரன் மூலமாக மற்றுமொரு குடத்தை உடைத்துவிட்டு மறைகின்றது. இதற்கு "கொள்ளிக்குடம்" என்று பெயர். நாளை தொடரும்.
(“நீ புகழுடன் இருக்க விரும்பினால் மற்றவர் படிப்பதற்கு தகுந்தவற்றை எழுது”)
கேது, குரு கிரகங்களின் ஆதிக்க நாளின்று.
அதிர்ஷ்ட எண்கள்: 2, 3, 5, 1
பொருந்தா எண்கள்: 7, 8, 6
அதிர்ஷ்ட வர்ணம்: மஞ்சள், நீலம்
இராமரத்தினம் ஜோதி
(தெஹிவளை ஸ்ரீ விஷ்ணு கோயில்)