06.03.2018 ஏவிளம்பி வருடம் மாசி மாதம் 22 ஆம் நாள் செவ்வாய்க்கிழமை.
கிருஷ்ணபட்ச பஞ்சமி திதி பின்னிரவு 4.28 மணிவரை. அதன் மேல் சஷ்டி திதி. சுவாதி நட்சத்திரம் பின்னிரவு 12.19 வரை. பின்னர் விசாகம் நட்சத்திரம். சிரார்த்த திதி தேய்பிறை பஞ்சமி. சித்தயோகம். சமநோக்குநாள். சந்திராஷ்டம நட்சத்திரங்கள்: ரேவதி, அஸ்வினி. சுபநேரங்கள்: காலை 10.30–11.30, மாலை 4.30– 5.30, ராகு காலம் 3.00– 4.30, எமகண்டம் 9.00–10.30, குளிகைகாலம் 12.00–1.30, வாரசூலம் –வடக்கு (பரிகாரம்– பால்) வாஸ்து நாள். வாஸ்து நேரம் பகல் 10.06 –10.42.
மேடம் : அமைதி, சாந்தம்
இடபம் : புகழ், பெருமை
மிதுனம் : அமைதி, நிம்மதி
கடகம் : நிறைவு, மகிழ்ச்சி
சிம்மம் : புகழ், பாராட்டு
கன்னி : பரிவு, பாசம்
துலாம் : புகழ், சாதனை
விருச்சிகம் : சிக்கல், சங்கடம்
தனுசு : நற்செயல், பாராட்டு
மகரம் : முன்னேற்றம், விருத்தி
கும்பம் : வரவு, இலாபம்
மீனம் : உயர்வு, விருத்தி
பெற்றோர்களுக்கு பிள்ளைகள் இறுதிக் காலத்தில் ஆற்ற வேண்டிய மூன்று கடமைகள் “ஜீவதோர் வாக்ய கரணாத் பிரத்யப்தம் பூரி போஜநாத் கயாயாம் பிண்ட தாநாச்ச திரிபி புத்ரஸ்ய புத்ரதா” பெற்றோர்களுக்கு பிள்ளைகள் ஆற்ற வேண்டியமுதற் கடமை பெற்றோர் இறந்த பின்பு அபரகர்மா (இறுதிச்சடங்கு) செய்தல் முதல் கடமை. இறந்த நாள் முதல் 12 நாள் வரை அபர சம்ஸ்காரங்கள் செய்தல்2 ஆவது கடமை. பெற்றோர் பெயர், கோத்திரம் சொல்லி விஷ்ணு பாதத்தில் நதிக்கரையில் பிண்ட தானமும் கயா சிரார்த்தமும் செய்தல் 3 ஆவது கடமை. (நாளை தொடரும்)
(“உன் சொத்துக்கள் எல்லாம் உன்னுடையவை என்றால், அடுத்த பிறவிக்கு அவற்றை உன்னுடன் எடுத்துச் செல்வதுதானே? – பெஞ்சமின் பிராங்கிளின்”)
சுக்கிரன், சந்திரன் கிரகங்களின் ஆதிக்க நாளின்று.
அதிர்ஷ்ட எண்கள்: 6, 7
பொருந்தா எண்கள்: 3, 9, 8
அதிர்ஷ்ட வர்ணம்: பச்சை
இராமரத்தினம் ஜோதி
(தெஹிவளை ஸ்ரீ விஷ்ணு கோயில்)