சுக்கில பட்ச ஏகாதசி திதி மாலை 3.19 வரை. அதன் மேல் துவாதசி திதி. புனர்பூசம் நட்சத்திரம் பின்னிரவு 4.16 வரை. பின்னர் பூசம் நட்சத்திரம். திதித்வயம். சிரார்த்த திதிகள் வளர்பிறை ஏகாதசி துவாதசி. அமிர்த சித்தயோகம். சமநோக்கு நாள் சந்திராஷ்டம நட்சத்திரம் பூராடம். சுபநேரங்கள்: காலை 9.30– 10.30, மாலை 3.15– 4.15, ராகு காலம் 7.30– 9.00, எமகண்டம் 10.30– 12.00, குளிகை காலம் 1.30– 3.-00, வார சூலம் – கிழக்கு (பரிகாரம்– தயிர்) சுபமுகூர்த்த நாள்
மேடம் : தனம், சம்பத்து
இடபம் : ஓய்வு, அசதி
மிதுனம் : முயற்சி, முன்னேற்றம்
கடகம் : உயர்வு, மேன்மை
சிம்மம் : அசதி, வருத்தம்
கன்னி : புகழ், பாராட்டு
துலாம் : புகழ், பெருமை
விருச்சிகம் : நட்பு, உதவி
தனுசு : போட்டி, ஜெயம்
மகரம் : வரவு மகிழ்ச்சி
கும்பம் : நஷ்டம், கவலை
மீனம் : வரவு மகிழ்ச்சி
இன்று வளர்பிறை ஏகாதசி விரதம். உபவாசமிருந்து ஸ்ரீமன் நாராயணனை வழிபடல் நன்று. குலசேகர ஆழ்வார் திரு நட்சத்திரம். “மாசி புனர்பூசம் காண்மின் இன்று மண்ணுலகில் பேசுகின்றேன்.” கொல்லிநகர் கோன் குலசேகரன் பிறப்பால் நல்லவர்கள் கொண்டாடும் நாள். அவதரித்த ஊர் திருவஞ்சிக்களம், மாதம் மாசி, நட்சத்திரம் புனர்பூசம், அம்சம் துவாரகா நிலைய வாசன் கண்ணனின் கௌஸ்து பாம்சம் அருளிய பிரபந்தம் பெருமாள் திருமொழி. செஞ்சொல் மொழி நூற்றஞ்சும் செப்பினான் வாழியே சேரலர் கோன் செங்கமலத் திருவடிகள் வாழியே! (“கடவுள் சேர்த்து வைத்தவர்களை யாராலும் பிரிக்க முடியாது” பெர்னாட்ஷா) சனி, குரு கிரகங்களின் ஆதிக்க நாளின்று
அதிர்ஷ்ட எண்கள்: 1, 5
பொருந்தா எண்கள்: 8, 6
அதிர்ஷ்ட வர்ணங்கள்: மஞ்சள், ஊதா நிறங்கள்
இராமரத்தினம் ஜோதி (தெஹிவளை ஸ்ரீ விஷ்ணு கோயில்)