22.02.2018 ஏவிளம்பி வருடம் மாசி மாதம் 10 ஆம் நாள் வியாழக்கிழமை.
சுக்கிலபட்ச ஸப்தமி திதி. பின்னிரவு 12.09 வரை. அதன் மேல் அஷ்டமி திதி. பரணி நட்சத்திரம் பகல் 11.39 வரை. பின்னர் கார்த்திகை நட்சத்திரம். சிரார்த்த திதி வளர்பிறை ஸப்தமி. சித்தயோகம் பகல் 11.39 வரை. பின்னர் மரணயோகம். கீழ்நோக்குநாள். சந்திராஷ்டம நட்சத்திரங்கள்: சுவாதி, விசாகம். சுபநேரங்கள்: பகல் 10.30– 11.30, ராகு காலம் 2.30– 3.00, எமகண்டம் 6.00– 7.30, குளிகை காலம் 9.00– 10.30, வாரசூலம்– தெற்கு (பரிகாரம் –தைலம்)
மேடம் : புகழ், சாதனை
இடபம் : தெளிவு, அமைதி
மிதுனம் : சினம், பகை
கடகம் : யோகம், அதிர்ஷ்டம்
சிம்மம் : நன்மை, நலம்
கன்னி : வெற்றி, ஜெயம்
துலாம் : பேராசை, நஷ்டம்
விருச்சிகம் : உழைப்பு, உயர்வு
தனுசு : தனம், லாபம்
மகரம் : அன்பு, பாசம்
கும்பம் : லாபம், லக் ஷ்மீகரம்
மீனம் : அன்பு, பாசம்
மனிதர்கள் இவ்வுலகில் வாழும்போது செய்த பாவ புண்ணியங்களை ஆராய சாட்சியாக 12 பேர்கள் யமதர்ம ராஜ சபையில் அமர்ந்துள்ளனர். அவர்கள் தர்மாதிபர், தநாத்யத்ஷர், தர்மராஜர், தநஞ்சயர், தர்மகுப்தர், தர்மஜீவர், தர்மக்ஞர், தர்மநந்தனர், நீதிமார்க்கர், அர்த்தவாதர், சத்தியவான், ஞானலோசனர் இந்த 12 பேர்கள் முன்னிலையில் ஜீவன் விசாரிக்கப்பட்டு ஜீவன் சுவர்க்கத்தில் வாசம் செய்ய வேண்டுமா? அல்லது நரகத்தில் வசிக்க வேண்டுமா? அடுத்த பிறவி எங்கே என்று சித்திரகுப்தர் முடிவு எடுக்கின்றார். நாளை தொடரும்.
ராகு, சனி கிரகங்களின் ஆதிக்க நாளின்று.
அதிர்ஷ்ட எண்கள்: 1, 5
பொருந்தா எண்கள்: 4, 8
அதிர்ஷ்ட வர்ணங்கள்: மஞ்சள், வெளிர்நீலம்
இராமரத்தினம் ஜோதி
(தெஹிவளை ஸ்ரீ விஷ்ணு கோயில்)