21.02.2018 ஏவிளம்பி வருடம் மாசி மாதம் 9 ஆம் நாள் புதன்கிழமை.
சுக்கில பட்ச சஷ்டி விரதம் பின்னிரவு 1.55 வரை. அதன் மேல் ஸப்தமி திதி. அஸ்வினி நட்சத்திரம் பகல் 12.30 வரை பின்னர் பரணி நட்சத்திரம். சிரார்த்த திதி வளர்பிறை சஷ்டி மரணயோகம். சமநோக்குநாள் சந்திராஷ்டம நட்சத்திரங்கள் சித்திரை, சுவாதி. சுபநேரங்கள் பகல் 10.30– 11.30, மாலை 4.30– 5.30, ராகு காலம் 12.00– 1.30, எமகண்டம் 7.30– 9.00, குளிகை காலம் 10.30– 12.00, வாரசூலம்– வடக்கு (பரிகாரம் –பால்) சுக்கிலபட்ச சஷ்டி விரதம்.
மேடம் : ஜெயம், புகழ்
இடபம் : ஏமாற்றம், கவலை
மிதுனம் : அன்பு, இரக்கம்
கடகம் : அமைதி, சாந்தம்
சிம்மம் : ஆதாயம், லாபம்
கன்னி : நிறைவு, மகிழ்ச்சி
துலாம் : வரவு, லாபம்
விருச்சிகம் : சுகம், ஆரோக்கியம்
தனுசு : அமைதி, தெளிவு
மகரம் : நோய், வருத்தம்
கும்பம் : போட்டி, ஜெயம்
மீனம் : சுகம், ஆரோக்கியம்
பித்ரு லோகம் என்றால் என்ன என்பதை அவதானிப்போம். இறந்துபோன நமது முன்னோர்கள் உட்பட அனைவரும் வாசம் செய்யும் இடமே பித்ரு லோகம் எனப்படும். நாம் தற்போது வசித்து வரும் பூ (மனுஷ்ய) லோகத்திற்கும் பித்ரு லோகத்திற்கும் இடைவெளி இலட்சக்கணக்கான யோஜனைகள். ஒரு யோஜனை என்பது ஆயிரம் மைல்கள். இந்த லோகத்தையே யமலோகம் என்று கருட புராணம் தெரிவிக்கின்றது. இறக்கும் ஜீவன் இறுதியில் பித்ரு லோகம் எனப்படும் உலகிற்கு செல்வதாகவே உப நிஷத்துக்கள் தெரிவிக்கின்றன. யமதர்ம ராஜன் சபையில் 12 பேர்கள் உள்ளனர். அவர்கள் எம்மை விசாரிப்பார்கள் அவர்கள் யார் என்பது நாளை தொடரும்.
(“நம் வாழ்க்கை என்னும் தேர்வில் காப்பியடிக்க முடியாது. ஏனெனில் நானே எழுதி நானே விடைத்தாளைத் திருத்துகின்றேன்” –இங்ஸ்)
குரு, கேது கிரகங்களின் ஆதிக்க நாளின்று.
அதிர்ஷ்ட எண்கள்: 1, 5
பொருந்தா எண்கள்: 6, 8
அதிர்ஷ்ட வர்ணங்கள்: மஞ்சள், ஊதா
இராமரத்தினம் ஜோதி
(தெஹிவளை ஸ்ரீ விஷ்ணு கோயில்)