16.02.2018 ஏவிளம்பி வருடம் மாசி மாதம் 4ஆம் நாள் வெள்ளிக்கிழமை.
சுக்கில பட்ச பிரதமை திதி பின்னிரவு 4.24 வரை. அதன் மேல் துவிதியை திதி. அவிட்டம் நட்சத்திரம் பகல் 10.24 வரை. பின்னர் சதயம் நட்சத்திரம். சிரார்த்த திதி. வளர்பிறை பிரதமை. சித்தயோகம். மேல்நோக்கு நாள் சந்திராஷ்டம நட்சத்திரம் மகம். சுபநேரங்கள் காலை 9.30– 10.30, பிற்பகல் 1.30– 2.30, ராகுகாலம் 10.30– 12.00, எமகண்டம் 3.00– 4.30, குளிகை காலம் 7.30– 9.00, வாரசூலம்– மேற்கு. (பரிகாரம்– வெல்லம்). பால்குண சுத்த பிரதமை பால்குண மாத ஆரம்பம். கோச் செங்கட் சோழர் நாயனார் குருபூஜை.
மேடம் : சுகம், ஆரோக்கியம்
இடபம் : தோல்வி, கவலை
மிதுனம் : இலாபம், லக் ஷ்மீகரம்
கடகம் : அன்பு, ஆதரவு
சிம்மம் : ஆதாயம், இலாபம்
கன்னி : தெளிவு, நிம்மதி
துலாம் : வெற்றி, அதிர்ஷ்டம்
விருச்சிகம் : பகை, விரோதம்
தனுசு : நலம், ஆரோக்கியம்
மகரம் : உழைப்பு, உயர்வு
கும்பம் : ஊக்கம், முன்னேற்றம்
மீனம் : உழைப்பு, உயர்வு
மனித உடலிலுள்ள ஜீவன் மரணத்தின் பின் வேறு இடத்திற்குச் செல்லும் என்பதையும் ஜீவன்கர்ம வினைகளுக்கு ஒப்ப மறுபிறவி எடுக்கிறது என்பதையும் உலகில் உள்ளஅனைத்து மதத்தினரும் ஒப்புக்கொள்கின்றார்கள். ஆகவேதான் இறந்தவரின் உடலை அடக்கம் செய்யும் விதத்தில் இந்துக்கள் கிறிஸ்தவர்கள், முகம்மதியர், சீக்கியர்கள் போன்ற அனைத்து மதத்தினரும் தங்கள் மதத்தில் கூறப்பட்ட விதமாக பின்பற்றி வருகின்றார்கள். உடலை வெறும் கட்டையைப் போல் யாரும் எறிந்து விடுவதில்லை. அபரகர்மா என்னும் இறுதிச் சடங்கை நாமும் இந்து மதத்தில் வேதசாஸ்திரங்களில் கூறப்பட்ட விதமாகவே செய்து வருகின்றோம். தொடரும்…..(பணத்தினால் அழகான நாயை விலைக்கு வாங்க முடியும். ஆனால் பணத்தால் அதன் வாலை ஆட்டுவிக்க முடியாது” – தல்லிங்ஸ்) கேது, சந்திரன் கிரகங்களின் ஆதிக்க நாளின்று.
அதிர்ஷ்ட எண்கள் :1, 5, 2
பொருந்தா எண்கள்: 8, 9
அதிர்ஷ்ட வர்ணங்கள்: வெளிரான நீலம், மஞ்சள்.
இராமரத்தினம் ஜோதி
(தெஹிவளை ஸ்ரீவிஷ்ணு கோயில்)