கிருஷ்ணபட்ச சதுர்த்தசி திதி பின்னிரவு 1.55 வரை. அதன் மேல் அமாவாசை திதி. திருவோணம் நட்சத்திரம் நாள் முழுவதும். சிரார்த்த திதி தேய்பிறை சதுர்த்தசி. சித்தயோகம் மேல்நோக்கு நாள். சந்திராஷ்டம நட்சத்திரம்: பூசம். சுபநேரங்கள்: காலை 9.00– 10.00, மாலை 4.30– 5.30, ராகு காலம் 12.00– 1.30, எமகண்டம் 7.30– 9.00, குளிகை காலம் 10.30– 12.00, வாரசூலம்– வடக்கு (பரிகாரம்– பால்) உலக காதலர் தினம்.
மேடம் : நலம், ஆரோக்கியம்
இடபம் : உயர்வு, மேன்மை
மிதுனம் : நிறைவு, பூர்த்தி
கடகம் : புகழ், பாராட்டு
சிம்மம் : நலம், ஆரோக்கியம்
கன்னி : இன்பம், மகிழ்ச்சி
துலாம் : அசதி, வருத்தம்
விருச்சிகம் : பக்தி, ஆசி
தனுசு : இலாபம், லக் ஷ்மீகரம்
மகரம் : நன்மை, அதிர்ஷ்டம்
கும்பம் : நலம், ஆரோக்கியம்
மீனம் : அதிர்ஷ்டம், நன்மை
நாம் வாழும் இவ்வுலகில் பாவங்கள் செய்தால் பரலோகத்தில் அதற்கு தண்டனை உண்டு. நாம் இறந்த பின்பு உடலை எரித்தால் அஸ்தி (சாம்பல்) ஆக உடல் மாறும் என்பதை உணர்ந்து கருத்தில் கொண்டவன் ஆஸ்திகன் எனப்படுகின்றான். மேற்கூறிய பரலோக தத்துவத்தை (நாஸ்தி) இல்லை எனக்கருதி கட்டுப்பாடின்றி வாழும் மனிதன் நாஸ்திகன் எனப்படுகின்றான். ஆகவே வேத சாஸ்திரங்களை நம்பி அதன் கருத்துக்களை ஏற்பவன் பொதுவாக மரணித்த பின்பும் உயர்நிலையை அடைகின்றான். (தொடரும்)
(“முதன் முதலாக நீங்கள் எதையாவது செய்யுங்கள். உங்கள் பின்னால் வருபவர்கள் அதை இன்னும் அழகாக செய்வார்கள்”)
புதன், செவ்வாய் கிரகங்களின் அதிர்ஷ்ட நாளின்று.
அதிர்ஷ்ட எண்கள் : 5, 9
பொருந்தா எண் : 8
அதிர்ஷ்ட வர்ணங்கள்: சிகப்பு, நீலம், சாம்பல்
இராமரத்தினம் ஜோதி (தெஹிவளை ஸ்ரீவிஷ்ணு கோயில்)