22.01.2018 ஏவிளம்பி வருடம் தை மாதம் 9 ஆம் நாள் திங்கட்கிழமை
சுக்கிலபட்ச பஞ்சமி திதி பிற்பகல் 1.38 வரை. பின்னர் சஷ்டி திதி. உத்திரட்டாதி நட்சத்திரம் பின்னிரவு 5.25 வரை. அதன் மேல் ரேவதி நட்சத்திரம். சிரார்த்த திதி. வளர்பிறை சஷ்டி. சித்தயோகம். மேல் நோக்குநாள். சந்திராஷ்டம நட்சத்திரம் உத்திரம். சுபநேரங்கள் காலை 9.30– 10.30, மாலை 4.30– 5.30, ராகு காலம் 7.30– 9.00, எமகண்டம் 10.30– 12,00, குளிகைகாலம் 1.30– 3.00, வாரசூலம் –கிழக்கு (பரிகாரம் – தயிர்) சுக்கிலபட்ச சஷ்டி. தமிழ்க்கடவுளான முருகப்பெருமானை வழிபடல் நன்று.
மேடம் : சுகம், ஆரோக்கியம்
இடபம் : அசதி, சோர்வு
மிதுனம் : நன்மை, அதிர்ஷ்டம்
கடகம் : லாபம், லக்ஷ்மீகரம்
சிம்மம் : புகழ், பாராட்டு
கன்னி : உழைப்பு, உயர்வு
துலாம் : உற்சாகம், மகிழ்ச்சி
விருச்சிகம் : அமைதி, சாந்தம்
தனுசு : வெற்றி, அதிர்ஷ்டம்
மகரம் : நற்செயல், பாராட்டு
கும்பம் : காரியசித்தி, அனுகூலம்
மீனம் : பணம், பரிசு
இன்று வசந்த பஞ்சமி. வீட்டில் ஸ்ரீலஷ்மி பூஜை செய்ய வருடம் முழுவதும் வசந்தமாகும்.
(“தந்தி” அடிக்கிற ஊருக்குப் போய்ச் சேரும்; வதந்தி பேசுகிறவரிடமே திரும்பி வரும்” – கவிஞர் கண்ணதாசன்)
ராகு, கேது கிரகங்களின் ஆதிக்க நாளின்று.
அதிர்ஷ்ட எண்கள்: 2, 1, 5, 6
பொருந்தா எண்கள்: 7, 4, 8
அதிர்ஷ்ட வர்ணங்கள்: மஞ்சள், லேசான நீலம், பச்சை.
இராமரத்தினம் ஜோதி
(தெஹிவளை ஸ்ரீ விஷ்ணு கோயில்)