04.01.2018 ஏவிளம்பி வருடம் மார்கழி மாதம் 20 ஆம் நாள் வியாழக்கிழமை.
கிருஷ்ண பட்ச திரிதியை திதி பின்னிரவு 2.37வரை. பின்னர் சதுர்த்தி திதி. பூசம் நட்சத்திரம். பகல் 10.26 வரை பின்னர் ஆயில்யம் நட்சத்திரம். சிரார்த்த திதி. தேய்பிறை திரிதியை அமிர்த சித்த யோகம். மேல் நோக்கு நாள். சந்திராஷ்டம நட்சத்திரம் பூராடம். சுபநேரங்கள் பகல் 10.30 – 11.30, ராகுகாலம் 1.30 – 3.00, எமகண்டம் 6.00 – 7.30, குளிகைகாலம் 9.00 – 10.30, வாரசூலம் – தெற்கு (பரிகாரம் – தைலம்)
மேடம் : நற்செயல், பாராட்டு
இடபம் : ஆசி, பக்தி
மிதுனம் : ஓய்வு, அசதி
கடகம் : திறமை, முன்னேற்றம்
சிம்மம் : அமைதி, தெளிவு
கன்னி : புகழ், பாராட்டு
துலாம் : அதிர்ஷ்டம், வெற்றி
விருச்சிகம் : ஆரோக்கியம், நலம்
தனுசு : நன்மை, அதிர்ஷ்டம்
மகரம் : பாசம், அன்பு
கும்பம் : லாபம், லக் ஷ்மீகரம்
மீனம் : அன்பு, பாசம்
திருப்பாவை “அன்று இவ்வுலகம் அளந்தாய் அடி போற்றி சென்றங்கு தென்னிலங்கை செற்றாய் திறல் போற்றி பொன்றச்சகடம் உதைத்தாய் புகழ் போற்றி இங்கு யாம் வந்தோம் இரங்கேலோ ரெம்பாவாய்”
“உயிர்களைக் கொல்லாமை அறத்திற்கு ஆணிவேர்; அந்த அறம் ஆன்மாவைத் தூய்மைப்படுத்தும்” – சமண சமயம்)
ராகு, சுக்கிரன் கிரகங்களின் ஆதிக்க நாளின்று.
அதிர்ஷ்ட எண்கள்: 1, 6
பொருந்தா எண்கள்: 8, 3
அதிர்ஷ்ட வர்ணங்கள்: கலந்த வர்ணங்கள்
இராமரத்தினம் ஜோதி
(தெஹிவளை ஸ்ரீவிஷ்ணு கோயில்)