கிருஷ்ணபட்ச அஷ்டமி திதி பின்னிரவு 5.01 வரை. அதன் மேல் நவமிதிதி. மகம் நட்சத்திரம் காலை 9.49 வரை. பின்னர் பூரம் நட்சத்திரம். சிரார்த்த திதி தேய்பிறை. அஷ்டமி கரிநாள். சுபம் விலக்குக. கீழ்நோக்கு நாள். சந்திராஷ்டம நட்சத்திரம் திருவோணம். சுபநேரங்கள் காலை10.45 – 11.45. மாலை 4.45 – 5.45. ராகுகாலம் 1.30 – 3.00. எமகண்டம் 6.00 – 7.30. குளிகை காலம் 9.00 – 10.30. வாரசூலம் – தெற்கு. (பரிகாரம் – தைலம்).
மேடம் : தடை, தாமதம்
இடபம் : பகை, விரோதம்
மிதுனம் : உற்சாகம், மகிழ்ச்சி
கடகம் : தனம், சம்பத்து
சிம்மம் : வெற்றி, அதிர்ஷ்டம்
கன்னி : சுகம், ஆரோக்கியம்
துலாம் : அச்சம், பகை
விருச்சிகம் : ஈகை, புண்ணியம்
தனுசு : களிப்பு, மகிழ்ச்சி
மகரம் : லாபம், லஷ்மீகரம்
கும்பம் : அமைதி, தெளிவு
மீனம் : புகழ், பெருமை
இன்று காலபைரவாஷ்டமி. காலபைரவரை வழிபடல் நன்று. பூரம் நட்சத்திரம் அம்பிகையான பார்வதி இந்நட்சத்திர தேவதையாவார். பார்வதிதேவியையும் ஸ்ரீ ஆண்டாளையும் இன்று வழிபடல் நன்று.
(“தகுதிகளை தொடர்ந்து வளர்த்துக் கொள்பவர்களையே எப்போதும் அதிர் ஷ்ட தேவதை பின்தொடர்கிறாள்”)
குரு, புதன் கிரகங்களின் ஆதிக்க நாளின்று.
அதிர்ஷ்ட எண்கள்: 1 – 3 – 5 – 9
பொருந்தா எண்கள் : 6 – 8
அதிர்ஷ்ட வர்ணங்கள் : மஞ்சள், இளஞ்சிவப்பு
இராமரத்தினம் ஜோதி(தெஹிவளை ஸ்ரீ விஷ்ணு கோயில்)