22.12.2017 ஏவிளம்பி வருடம் மார்கழி மாதம் 7 ஆம் நாள் வெள்ளிக்கிழமை.
சுக்கில பட்ச சதுர்த்தி திதி இரவு 8.16 வரை. பின்னர் பஞ்சமி திதி. திருவோண நட்சத்திரம் மாலை 5.46 வரை. பின்னர் அவிட்டம் நட்சத்திரம். சிரார்த்த திதி வளர்பிறை சதுர்த்தி. மரணயோகம். மேல்நோக்கு நாள். சந்திராஷ்டம நட்சத்திரங்கள் புனர்பூசம், பூசம். சுபநேரங்கள் காலை 9.15 – 10.15, மாலை 4.45 – 5.45, ராகுகாலம் 10.30 – 12.00, எமகண்டம் 3.00 – 4.30, குளிகைகாலம் 7.30 – 9.00, வாரசூலம் – மேற்கு (பரிகாரம் – வெல்லம்)
மேடம் : செலவு, விரயம்
இடபம் : முயற்சி, முன்னேற்றம்
மிதுனம் : புகழ், பெருமை
கடகம் : பிரயாணம், அலைச்சல்
சிம்மம் : குழப்பம், சஞ்சலம்
கன்னி : சினம், பகை
துலாம் : வீண்செலவு, பற்றாக்குறை
விருச்சிகம் : தெளிவு, அமைதி
தனுசு : கவனம், எச்சரிக்கை
மகரம் : யோகம், அதிர்ஷ்டம்
கும்பம் : பக்தி, ஆசி
மீனம் : அதிர்ஷ்டம், யோகம்
சகல விஷ்ணு ஆலயங்களிலும் உதயத்தில் திருப்பள்ளியெழுச்சிப் பூஜை, திருப்பாவை நோன்பு, திருப்பாவை ஓதுதல், மாத சதுர்த்தி, திருவோண விரதம், ஸ்ரீ ஆண்டாள் உற்சவம், இன்று விநாயகப் பெருமானையும் பூமிப் பிராட்டியின் அவதாரமான ஸ்ரீ ஆண்டாளையும் துவாரகா நிலைய வாசனான கண்ணபிரானையும் வழிபடல் நன்று.
("நல்ல எண்ணங்கள் என்னும் விதைகளைத் தூவினால் நற்பண்புகள் என்னும் அறுவடையைப் பெறலாம்”– அறிஞர் அண்ணா)
ராகு, சனி கிரகங்களின் ஆதிக்க நாளின்று.
அதிர்ஷ்ட எண்கள்: 1, 5
பொருந்தா எண்கள்: 4, 8
அதிர்ஷ்ட வர்ணங்கள்: மஞ்சள், வெளிர் நீலம்
இராமரத்தினம் ஜோதி
(தெஹிவளை ஸ்ரீ விஷ்ணு கோயில்)