21.12.2017 ஏவிளம்பி வருடம் மார்கழி மாதம் 6 ஆம் நாள் வியாழக்கிழமை.
சுக்கில பட்ச திரிதியை திதி மாலை 6.43 வரை. அதன் மேல் சதுர்த்தி திதி. உத்தராடம் நட்சத்திரம் மாலை 3.42 வரை. பின்னர் திருவோணம் நட்சத்திரம். சிரார்த்த திதி வளர்பிறை திரிதியை சித்தயோகம். கரிநாள். சுபம் விலக்குக. மேல் நோக்கு நாள். சந்திராஷ்டம நட்சத்திரங்கள் திருவாதிரை, புனர்பூசம். சுபநேரம் பகல் 10.45– 11.45, ராகு காலம் 1.30–3.00 வரை. எமகண்டம் 6.00– 7.30, குளிகை காலம் 9.00– 10.30. வாரசூலம் –தெற்கு (பரிகாரம்– தைலம்)
மேடம் : நலம், ஆரோக்கியம்
இடபம் : பொறுமை, அமைதி
மிதுனம் : நன்மை, அதிர்ஷ்டம்
கடகம் : வெற்றி, அதிர்ஷ்டம்
சிம்மம் : நலம், ஆரோக்கியம்
கன்னி : அமைதி, தெளிவு
துலாம் : நட்பு, உதவி
விருச்சிகம் : ஜெயம், புகழ்
தனுசு : யோகம், அதிர்ஷ்டம்
மகரம் : மதிப்பு, காரியசித்தி
கும்பம் : வரவு, லாபம்
மீனம் : காரியசித்தி, புகழ்
மார்கழி திருப்பாவை 6 ஆம் நாள் “பிள்ளாய் எழுந்திராய், பேய் முலை நஞ்சுண்டு உள்ளம் புகுந்து குளிர்ந்தேலோ ரெம்பாவாய்”. தொண்டரடிப் பொடியாழ்வார் அருளிச்செய்த திருப்பள்ளியெழுச்சி. “அதிர்தலில் அலை கடல் போன்றுளது எங்கும் அரங்கத்தம்மா! பள்ளி எழுந்தருளாயே! ஆழ்வார் திருவடிகளே சரணம்.
(“வாயிலிருந்து புறப்பட்ட வார்த்தை ஆயிரம் கொடுத்தாலும் திரும்பி வராது. கறந்த பால் மீண்டும் மடி புகுவதில்லை” –கன்னடப் பழமொழி)
குரு, கேது கிரகங்களின் ஆதிக்க நாளின்று
அதிர்ஷ்ட எண்கள் : 1, 5, 9
பொருந்தா எண்கள் : 6, 8
அதிர்ஷ்ட வர்ணங்கள்: மஞ்சள், இளஞ்சிவப்பு
இராமரத்தினம் ஜோதி
(தெஹிவளை ஸ்ரீ விஷ்ணு கோயில்)