19.12.2017 ஏவிளம்பி வருடம் மார்கழி மாதம் 04ஆம் நாள் செவ்வாய்க்கிழமை.
சுக்கிலபட்ச பிரதமை திதி பிற்பகல் 2.47 வரை. அதன் மேல் துவிதியை திதி. மூலம் நட்சத்திரம் பகல் 10.49 வரை. பின்னர் பூராடம் நட்சத்திரம். அதிதி. கீழ்நோக்குநாள். சந்திராஷ்டம நட்சத்திரம் மிருகசீரிஷம். சுபநேரங்கள்: பகல் 10.45 – 11.45, மாலை 4.45 – 5.45, ராகுகாலம் 3.00 – 4.30, எமகண்டம் 9.00– 10.30, குளிகை காலம் 12.00 – 1.30, வாரசூலம்– வடக்கு (பரிகாரம்–பால்). சந்திர தரிசனம். சகல விஷ்ணுவாலயங்களிலும் காலை திருப்பாவை. திருநள்ளாறு. சனி மாற்றம்.
மேடம் : முயற்சி, முன்னேற்றம்
இடபம் : அமைதி, சாந்தம்
மிதுனம் : புகழ், பெருமை
கடகம் : உயர்வு, மேன்மை
சிம்மம் : நிறைவு, பூர்த்தி
கன்னி : யோகம், அதிர்ஷ்டம்
துலாம் : உதவி, நட்பு
விருச்சிகம் : உழைப்பு, உயர்வு
தனுசு : அன்பு, இரக்கம்
மகரம் : நட்பு, உதவி
கும்பம் : சினம், பகை
மீனம் : தோல்வி, கவலை
இன்று சனிப்பெயர்ச்சி சனி பகவான் காலை மணி 9.59 க்கு விருச்சிக ராசியில் இருந்து தனுசு ராசியில் பிரவேசிக்கின்றார். இதனை முன்னிட்டு தெஹிவளை ஸ்ரீவெங்கடேஸ்வர மகாவிஷ்ணு மூர்த்தி தேவஸ்தானத்தில் காலை, மாலை விஷேட பிரிதி ஹோமங்கள், அபிஷேகங்கள், சனி பகவானுக்கு நடைபெறும். மார்கழி தனுர் மாத பூஜை, திருப்பள்ளியெழுச்சி பூஜை, திருப்பாவை ஓதல் இடம்பெறும்.
(“கைக்கு அருகில் உள்ள முதல் கடமையைச் செய். அடுத்த கடமை என்னவென்று தானே புலப்படும்” –கார் லைல்)
சூரியன், புதன் கிரகங்களின் ஆதிக்க நாளின்று.
அதிர்ஷ்ட எண்கள் : 1, 5, 9
பொருந்தா எண் : 8
அதிர்ஷ்ட வர்ணங்கள் : மஞ்சள், சாம்பல் நிற வர்ணங்கள்
இராமரத்தினம் ஜோதி
(தெஹிவளை ஸ்ரீ விஷ்ணு கோயில்)