16.12.2017 ஏவிளம்பி வருடம் மார்கழி மாதம் 1 ஆம் நாள் சனிக்கிழமை
கிருஷ்ணபட்ச திரயோதசி திதி காலை 8.51 வரை. அதன் மேல் சதுர்த்தசி திதி. அனுஷம் நட்சத்திரம் பின்னிரவு 5.45 வரை. பின்னர் கேட்டை நட்சத்திரம். சிரார்த்த திதி தேய்பிறை சதுர்த்தசி சித்தயோகம் சமநோக்கு நாள் சந்திராஷ்டம நட்சத்திரம் பரணி. சுபநேரங்கள்: பகல்10.45– 11.45, மாலை 4.45– 5.45, ராகுகாலம் 9.00– 10.30, எமகண்டம் 1.30– 3.00, குளிகை காலம் 6.00– 7.30, வாரசூலம்– கிழக்கு (பரிகாரம்–தயிர்) மாத சிவராத்திரி புண்யகாலம். விஷ்ணுவாலய வழிபாடு, கெருட தரிசனம் நன்று.
மேடம் : உயர்வு, மேன்மை
இடபம் : அன்பு, இரக்கம்
மிதுனம் : நன்மை, அதிர்ஷ்டம்
கடகம் : வீண், செலவு பற்றாக்குறை
சிம்மம் : அதிர்ஷ்டம், யோகம்
கன்னி : வரவு, லாபம்
துலாம் : நலம், ஆரோக்கியம்
விருச்சிகம் : பிரயாணம், அசதி
தனுசு : தெளிவு, அமைதி
மகரம் : கவனம், எச்சரிக்கை
கும்பம் : புகழ், பெருமை
மீனம் : அமைதி, சாந்தம்
இன்று மார்கழி (தனூர்) மாதப் பிறப்பு மாதங்களில் நாள் மார்கழி என்றார் கீதையில் துவாரகைக் கண்ணன். தெஹிவளை, ஸ்ரீ வெங்கடேஸ்வர மகா விஷ்ணு மூர்த்தி தேவஸ்தானத்தில் அதிகாலை தனூர் மாத பூஜாரம்பம், திருப்பள்ளியெழுச்சி பாடல்கள் பூஜை, திருப்பாவை நோன்பு, பூமிப் பிராட்டி ஆண்டாளாக அவதரித்து திருப்பாவையில் பரமனடிபாடி, உத்தமன் பேர்பாடி, கேசவனைப்பாடி நாம் உய்யுமாறு உகந்து காட்டியுள்ளார்.
இப்பாவை நோன்பு மார்கழித் திங்கள் மதிகொண்ட நன்நாளில் நாமும் திருப்பாவை ஓதி பல்லாண்டு பாடி அதில் உள்ள அர்த்தங்களை வல்லோர் வாயில் கேட்டிருந்து உகந்து வாழ்வோமாக. ஆண்டாள் திருவடிகளே சரணம்.
கேது, சந்திரன் கிரகங்களின் ஆதிக்க நாளின்று
அதிர்ஷ்ட எண்கள்: 1, 5
பொருந்தா எண்கள்: 7, 8, 9
அதிர்ஷ்ட வர்ணங்கள்: வெளிர் நீலம், வெளிர் மஞ்சள்
இராமரத்தினம் ஜோதி (தெஹிவளை ஸ்ரீ விஷ்ணு கோயில்)