14.12.2017 ஏவிளம்பி வருடம் கார்த்திகை மாதம் 28 ஆம் நாள் வியாழக்கிழமை.
கிருஷ்ணபட்ச ஏகாதசி திதி காலை 6.33 வரை. அதன் மேல் துவாதசி திதி. சுவாதி நட்சத்திரம் பின்னிரவு 1.50 வரை. பின்னர் விசாகம் நட்சத்திரம். சிரார்த்த திதி தேய்பிறை துவாதசி. அமிர்த சித்தயோகம். சமநோக்கு நாள். சந்திராஷ்டம நட்சத்திரங்கள் உத்தரட்டாதி, ரேவதி. சுபநேரங்கள் பகல் 10.45– 11.45, மாலை 4.45– 5.45, ராகு காலம் 1.30– 3.00, எமகண்டம் 6.00– 7.30, குளிகை காலம் 9.00– 10.30, வார சூலம் – தெற்கு (பரிகாரம் – தைலம்) விவாக சுபமுகூர்த்த நாள்.
மேடம் : நலம், ஆரோக்கியம்
இடபம் : உதவி, நட்பு
மிதுனம் : பிரயாணம், அலைச்சல்
கடகம் : நிறைவு, பூர்த்தி
சிம்மம் : குழப்பம், சங்கடம்
கன்னி : ஜெயம், புகழ்
துலாம் : பணம், பரிசு
விருச்சிகம் : புகழ், பெருமை
தனுசு : அமைதி, தெளிவு
மகரம் : கவனம், எச்சரிக்கை
கும்பம் : ஓய்வு, அசதி
மீனம் : கவனம், எச்சரிக்கை
இன்று கிருஷ்ணபட்ச வைஷ்ணவ ஏகாதசி விரதம். உபவாஸமிருந்து மகா விஷ்ணுவை வழிபடல் நன்று. பரமாத்மா என்னும் சொல் மகாவிஷ்ணுவை மட்டுமே குறிக்கும். அவனே பராத்பரன், ஜகத்காரணபூதன், ஸர்வ வியாபகன், ஸர்வ நியாமகன், பரம காருனியன், ஸர்வலோக சரண்யன், ஸர்வ சக்தியுக்தன், ஸத்யகாமன், ஆபஸ்தகன், ஸகலார்த்திகரன், ஏகாதசி நாளான இன்று துவாரகா நாதனான எம் பெருமானை வழிபடுதல் நன்று.
புதன், செவ்வாய் கிரகங்களின் ஆதிக்க நாளின்று.
அதிர்ஷ்ட எண்கள்: 5, 9
பொருந்தா எண்கள்: 2, 8
அதிர்ஷ்ட வர்ணங்கள்: சாம்பல், சிவப்பு, நீலம்
இராமரத்தினம் ஜோதி
(தெஹிவளை ஸ்ரீ விஷ்ணு கோயில்)