கிருஷ்ணபட்ச பஞ்சமி திதி பின்னிரவு 12.34 வரை. அதன் மேல் சஷ்டி திதி. திருவாதிரை நட்சத்திரம் முன்னிரவு 9.01 வரை. பின்னர் புனர்பூசம் நட்சத்திரம் சிரார்த்த திதி தேய்பிறை பஞ்சமி. சித்தயோகம் மேல் நோக்கு நாள் சந்திராஷ்டம நட்சத்திரங்கள் அனுஷம், கேட்டை. சுபநேரங்கள் பகல் 10.45 – 11.45, மாலை 4.45 – 5.45, ராகுகாலம் 12.00 – 1.30, எமகண்டம் 7.30 – 9.00, குளிகை காலம் 10.30 – 12.00, வாரசூலம் – வடக்கு (பரிகாரம் – பால்)
மேடம் : வெற்றி, யோகம்
இடபம் : நன்மை, அதிர்ஷ்டம்
மிதுனம் : லாபம், லக் ஷ்மீகரம்
கடகம் : செலவு, பற்றாக்குறை
சிம்மம் : வரவு, லாபம்
கன்னி : சுகம், ஆரோக்கியம்
துலாம் : சுபம், மங்களம்
விருச்சிகம் : புகழ், பெருமை
தனுசு : உயர்வு, மேன்மை
மகரம் : நலம், ஆரோக்கியம்
கும்பம் : நட்பு, உதவி
மீனம் : சுகம், ஆரோக்கியம்
இன்று திருவாதிரை நட்சத்திரம். உருத்திரனாகிய சிவன் இந்நட்சத்திர தேவதையாவார். சிவன் எட்டு குணங்களையுடையவன். அவை தன் வயத்தனாதல், தூய உடம்பினனாதல், இயற்கை உணர்வினனாதல், முற்றும் உணர்தல், இயல்பாக பாசங்களில் இருந்து நீங்குதல், பேரருள் உடைமை, ஆற்றலுடைமை, முடிவில் வரம்பு இலா இன்பம். இந்த இறை இயல்புகள் எட்டையும் வள்ளுவர் ஆதிபகவான் மலர்மிசை ஏகினான், வேண்டுதல் வேண்டாமை இலான் பொறிவாயில் ஐந்தறிவித் தான், தனக்கு உவமை இலான், அறவாழி அந்தணன், வாலறிவன், இறைவன் என்று ஓதினர். இன்று சிவனை வழிபடல் சிறந்தது.
(“அறியாமை ஆண்டவனின் சாபம்: அறிவோ விண்ணை நோக்கி நாம் பறக்கும் இறக்கை” ஷேக்ஸ்பியர்)
சனி, சந்திரன் ஆதிக்கம் கொண்ட இன்று.
அதிர்ஷ்ட எண்கள்: 1, 5, 7
பொருந்தா எண்கள்: 8, 9
அதிர்ஷ்ட வர்ணங்கள்: மஞ்சள், பச்சை
இராமரத்தினம் ஜோதி (தெஹிவளை ஸ்ரீ விஷ்ணு கோயில்)