01.11.2017 ஏவிளம்பி வருடம் ஐப்பசி மாதம் 15 ஆம் நாள் புதன்கிழமை.
சுக்கில பட்ச துவாதசி திதி மாலை 3.25 வரை. அதன் மேல் திரயோதசி திதி. உத்தரட்டாதி நட்சத்திரம். பின்னிரவு 5.47 வரை. பின்னர் ரேவதி நட்சத்திரம். சிரார்த்த திதி. வளர்பிறை துவாதசி. சித்த யோகம். மேல்நோக்கு நாள். சந்திராஷ்டம நட்சத்திரம் பூரம். சுபநேரங்கள் காலை 9.15– 10.15, பகல் 10.45– 11.45, மாலை 5.15– 6.05, ராகு காலம் 12.00– 1.30, எமகண்டம் 7.30– 09.00, குளிகை காலம் 10.30– 12.00, வாரசூலம் – வடக்கு (பரிகாரம்– பால்) சுபமுகூர்த்த நாள். சீராப்தி பூஜை. சுக்கில பட்ச மஹா பிரதோஷம். சாதுர் மாஸ்ய விரத பூர்த்தி.
மேடம் : நிறைவு, பூர்த்தி
இடபம் : சுகம், ஆரோக்கியம்
மிதுனம் : ஜெயம், புகழ்
கடகம் : அன்பு, பாசம்
சிம்மம் : உதவி, நட்பு
கன்னி : போட்டி, ஜெயம்
துலாம் : சினம், பகை
விருச்சிகம் : மறதி, விரயம்
தனுசு : திறமை, முன்னேற்றம்
மகரம் : அன்பு, ஆதரவு
கும்பம் : பக்தி, ஆசி
மீனம் : அன்பு, இரக்கம்
இன்று சுக்கிலபட்ச மஹாபிரதோஷம். சந்தியாகாலத்தில் சிவவழிபாடு, நந்தி தேவரை வழிபடுதலும் நன்று. மதனதுவாதசி. துளசிவிவாகம். துளசி லக் ஷ்மியையும் கிருஷ்ண பகவானையும் வழிபட பாவங்கள் விலகும். பெண்களுக்கு திருமண யோகம் ஏற்படும். தீர்க்க சுமங்கலியாக இருப்பர்.
(“வளமுடன் நீ வாழும்போது நண்பர்கள் உன்னை அறிவர் வறுமையில் நீ வாழும்போது நண்பர்களை நீ அறிவாய்" –ரஸ்கின் )
சூரியன், ராகு கிரகங்களின் ஆதிக்க நாளின்று.
அதிர்ஷ்ட எண்கள்: 1, 5
பொருந்தா எண்: 8
அதிர்ஷ்ட வர்ணங்கள்: மஞ்சள், வெளிர்நீலம்
இராமரத்தினம் ஜோதி
(தெஹிவளை ஸ்ரீ விஷ்ணு கோயில்)