30.10.2017 ஏவிளம்பி வருடம் ஐப்பசி மாதம் 13 ஆம் நாள் திங்கட்கிழமை.
சுக்கில பட்ச தசமி திதி மாலை 3.41 வரை. அதன் மேல் ஏகாதசி திதி. சதயம் நட்சத்திரம் பின்னிரவு 5.22 வரை. பின்னர் பூரட்டாதி நட்சத்திரம். சிரார்த்த திதி. வளர்பிறை தசமி திதி. சித்தயோகம். மேல் நோக்குநாள். சந்திராஷ்டம நட்சத்திரம் ஆயில்யம். சுபநேரங்கள் காலை 9.15– 10.15, மாலை 4.45– 5.45, ராகு காலம் 7.30– 9.00, எமகண்டம் 10.30– 12.00, குளிகை காலம் 1.30– 3.00, வாரசூலம்– கிழக்கு (பரிகாரம்– தயிர்) சுபமுகூர்த்த நாள். காற்றழுத்த தாழ்வு மண்டலம் மழை பெய்யும் வாய்ப்பு.
மேடம் : அன்பு, பாசம்
இடபம் : மறதி, விரயம்
மிதுனம் : சினம், பகை
கடகம் : போட்டி, ஜெயம்
சிம்மம் : புகழ், பெருமை
கன்னி : பிரயாணம், செலவு
துலாம் : அமைதி, தெளிவு
விருச்சிகம் : ஜெயம், புகழ்
தனுசு : லாபம், லக் ஷ்மீகரம்
மகரம் : இன்பம், மகிழ்ச்சி
கும்பம் : தனம், சம்பத்து
மீனம் : இன்பம், மகிழ்ச்சி
இன்று ஐப்பசி சதயம் நட்சத்திரம். பேயாழ்வார் திரு நட்சத்திரம். அவதரித்த ஊர் திருமயிலை (மயிலாப்பூர்) மாதம் ஐப்பசி. நட்சத்திரம் சதயம். அம்சம் நந்தகாம்சம். அருளிய பிரபந்தம்; மூன்றாம் திருவந்தாதி. திருக்கண்டேன் என நூறும் செப்பினான் வாழியே! சிறந்த ஐப்பசி சதயம் செனித்த வள்ளல் வாழியே! பெருக்கமுடன் திருமழிசை பிரான் தொழுவோன் வாழியே! பேயாழ்வார் தாளிணை இப்பெருநிலத்தில் வாழியே!
குரு, புதன் முதலான சுபகிரகங்களின் ஆதிக்க நாளின்று.
அதிர்ஷ்ட எண்கள்: 1, 3, 5, 9,
பொருந்தா எண்கள்: 6, 8
அதிர்ஷ்ட வர்ணங்கள்: மஞ்சள், இளஞ் சிவப்பு
இராமரத்தினம் ஜோதி
(தெஹிவளை ஸ்ரீ விஷ்ணு கோயில்)