25.10.2017 ஏவிளம்பி வருடம் ஐப்பசி மாதம் 08 ஆம் நாள் புதன்கிழமை.
சுக்கிலபட்ச பஞ்சமி திதி காலை 8.33 வரை. அதன்மேல் சஷ்டி திதி. மூலம் நட்சத்திரம். முன்னிரவு 08.22 வரை. பின்னர் பூராடம். சிரார்த்த திதி வளர்பிறை சஷ்டி. மரண யோகம். கீழ்நோக்குநாள். சந்திராஷ்டம நட்சத்திரங்கள்: கார்த்திகை, ரோகிணி. சுபநேரங்கள் பகல் 10.45 – 11.45, மாலை 4.45 – 5.45. ராகுகாலம் 12.00 –1.30, எமகண்டம் 7.30 – 9.00, குளிகை காலம் 10.30 – 12.00, வாரசூலம் – வடக்கு. (பரிகாரம் – பால்) சகல சுப்பிரமணிய ஸ்தலங்களிலும் ஸ்கந்த சஷ்டி சூரசம்ஹார பெருவிழா. ஐயடிகள் காடவர் கோன் நாயனார் குருபூஜை. ஸ்ரீ ஆஞ்சநேயரை இன்று வழிபடல் நன்று.
மேடம் : செலவு, விரயம்
இடபம் : ஆதாயம், லாபம்
மிதுனம் : வரவு, லாபம்
கடகம் : தடை, அலைச்சல்
சிம்மம் : நன்மை, யோகம்
கன்னி : சுகம், ஆரோக்கியம்
துலாம் : புகழ், பெருமை
விருச்சிகம் : விவேகம், வெற்றி
தனுசு : புகழ், கீர்த்தி
மகரம் : உழைப்பு, உயர்வு
கும்பம் : உதவி, நட்பு
மீனம் : உயர்வு, மேன்மை
இன்று மணவாள மாமுனிகள் திருநட்சத்திரம். இப்புவியில் ஐப்பசியில் திருமூலத்தில் அவதரித்தான். வாழியே! முப்புரிநூல் மணிவடமும் முக்கோல் தரித்தான் வாழியே! மூதரிய மணவாள மாமுனிகள் வாழியே அடியார்கள் வாழ அரங்க நகர்வாழ சடகோபன் தண்டமிழ் நூல் வாழ கடல் சூழ்ந்த மண்ணுலகம் வாழ மணவாள மாமுனியே இன்னும் ஒரு நூற்றாண்டிரும் என்று பகவானால் அருளப்பெற்றவர்.
("ஒவ்வொரு பறவைக்கும் இறைவன்தான் உணவளிக்கிறான். ஆனால் அவர் அவைகளை கூட்டிற்குள் அடைப்பதில்லை” -– ஹாலண்டு)
கேது,செவ்வாய் கிரகங்களின் ஆதிக்க நாள் இன்று.
அதிர்ஷ்ட எண்: 5, 6
பொருந்தா எண்கள்: 7,8,2
அதிர்ஷ்ட வர்ணங்கள்: நீலம், மஞ்சள்
இராமரத்தினம் ஜோதி
(தெஹிவளை ஸ்ரீ விஷ்ணு கோயில்)