01.10.2017 ஏவிளம்பி வருடம் புரட்டாதி மாதம் 15 ஆம் நாள் ஞாயிற்றுக்கிழமை.
சுக்கிலபட்ச ஏகாதசி திதி பின்னிரவு 1.20 வரை. அதன் மேல் துவாதசி திதி. திருவோணம் நட்சத்திரம் முன்னிரவு 7.38 வரை. பின்னர் அவிட்டம் நட்சத்திரம். சிரார்த்த திதி. வளர்பிறை. ஏகாதசி. அமிர்தயோகம். மேல்நோக்கு நாள் சந்திராஷ்டம நட்சத்திரங்கள் புனர்பூசம், பூசம். சுபநேரங்கள் பகல் 10.45– 11.45, ராகுகாலம் 4.30– 6.00, எமகண்டம் 12.00– 1.30, குளிகைகாலம் 3.00– 4.30, வாரசூலம்– மேற்கு (பரிகாரம்– வெல்லம்).
மேடம் : ஆதாயம், லாபம்
இடபம் :காரியசித்தி, அனுகூலம்
மிதுனம் : வரவு, லாபம்
கடகம் வெற்றி, யோகம்
சிம்மம் : சிரமம், தடை
கன்னி : லாபம், லக் ஷ்மீகரம்
துலாம் : நலம், ஆரோக்கியம்
விருச்சிகம் : செலவு, விரயம்
தனுசு : சுகம், ஆரோக்கியம்
மகரம் : அமைதி, தெளிவு
கும்பம் : உதவி, நட்பு
மீனம் : பகை, விரோதம்
சுக்கிலபட்ச ஸர்வ ஏகாதசி விரதம் திருவோணம் நட்சத்திரம் உபவாஸமிருந்து ‘துவாரகா நிலைய வாசன்’ எம்பெருமாள் ஸ்ரீமன் நாராயணனை வழிபடல் நன்று. இன்று தெஹிவளை ஸ்ரீ வெங்கடேசப் பெருமாள் ஆலயத்தில் அபிஷேகம் நடைபெற்று அன்னதானம் வழங்கப்படும். வேதாந்த தேசிகர் திருநட்சத்திரம் இராமானுஜருக்கு பின் வைஷ்ணவ சித்தாந்தத்தை சிறப்பாக விளக்கம் செய்தவர். ‘செய்ய தமிழ் மாலைகள் நாம் தெளிய வோதி தெளியாத மறை நிலங்கள் தெளிகின்றோமோ’ என்று தெரியாத சமஸ்கிருத மொழிக்கு தமிழில் விளக்கம் அளித்தவர். இவர் நட்சத்திரம் புரட்டாதி திருவோணம். இயற்றிய நூல்கள் ரகஸ்ய திரையசாரம், பாஞ்சராத்ர ரட்சர், திராவிட வேத உப நிஷர் முதலியன.
சூரியன், குரு கிரகங்களின் ஆதிக்க நாளின்று.
அதிர்ஷ்ட எண்கள்: 1, 5
பொருந்தா எண்: 8
அதிர்ஷ்ட வர்ணங்கள்: மஞ்சள், ஊதா நிறங்கள்.
இராமரத்தினம் ஜோதி
(தெஹிவளை ஸ்ரீ விஷ்ணு கோயில்)