கிருஷ்ணபட்ச அஷ்டமி திதி முன்னிரவு 8.32 வரை. அதன் மேல் நவமி திதி. சுவாதி நட்சத்திரம் பகல் 12.38 வரை. அதன் மேல் மரண யோகம் பின்னர் விசாகம் நட்சத்திரம். சிரார்த்த திதி தேய்பிறை அஷ்டமி. அமிர்தயோகம் பகல் 12.38 வரை. அதன் மேல் மரண யோகம். சமநோக்கு நாள். சந்திராஷ்டம நட்சத்திரங்கள் ரேவதி, அஷ்வினி சுபநேரங்கள் காலை 6.30– 7.30, 9.30– 10.30. மாலை 4.45– 5.45. இராகு காலம் 7.30– 9.00. எமகண்டம் 10.30– 12.00. குளிகை காலம் 1.30– 3.00. வார சூலம் கிழக்கு (பரிகாரம் – தயிர்) திருநீலகண்டர், தாயுமானவர், குரு பூஜை.
மேடம்: நலம், சுகம்
இடபம்: நட்பு, உதவி
மிதுனம்: திறமை, முன்னேற்றம்
கடகம்: பாசம், அன்பு
சிம்மம்: விருத்தி, பெருமை
கன்னி: செலவு, விரயம்
துலாம்: புகழ், பாராட்டு
விருச்சிகம்: வெற்றி, யோகம்
தனுசு: கஷ்டம், கவலை
மகரம்: புகழ், சாதனை
கும்பம்: அமைதி, தெளிவு
மீனம்: நலம், ஆரோக்கியம்
தொண்டரடிப் பொடியாழ்கள் அருளிய திருமாலை. “திருமாலை அறியாதோர் திருமாலை அறியாதார்” மற்றுமோர் தெய்வம் உண்டே? மதியிலா மானிடங்கள். உற்ற போதன்றி நீங்கள் ஒருவனென்று உணரமாட்டீர். பொருள்– அறிவு கெட்ட மனிதர்களே! கன்றுகளை மேய்த்த ஸ்ரீ கிருஷ்ணனை தவிர வேறு ஒரு தெய்வம் உண்டோ? ஆபத்து வரும்போது மட்டுமே ஸ்ரீமன் நாராயனணை நம்புகிறீர்கள். மற்ற சமயம் அவனை நினைப்பதில்லை. வேதப் பொருளே அவன்தான். அவனன்றி தெய்வமில்லை. ஆதலால் அவனது திருவடிகளை சரணடையுங்கள். (“கொந்தளிப்பில்லாத கடல் ஒரு நல்ல மாலுமியை எப்பொழுதும் உருவாக்கியதில்லை”) சூரியன் குரு கிரகங்களின் ஆதிக்க நாள் இன்று.
அதிர்ஷ்ட எண்கள்: 1– 5
பொருந்தா எண்கள்: ஏனையவை.
அதிர்ஷ்ட வர்ணங்கள்: மஞ்சள், ஊதா
இராமரத்தினம் ஜோதி (தெஹிவளை ஸ்ரீவிஷ்ணு கோயில்)