16.08.2017 ஏவிளம்பி வருடம் ஆடி மாதம் 31 ஆம் நாள் புதன்கிழமை
கிருஷ்ணபட்ச நவமி திதி பகல் 1.46 வரை. அதன்மேல் தசமி திதி. ரோகிணி நட்சத்திரம். பின்னிரவு 12.07 வரை. பின்னர் மிருசீரிடம் நட்சத்திரம். திதித்வயம் சிரார்த்த திதிகள் தேய்பிறை நவமி தசமி. சித்தயோகம் மேல்நோக்கு நாள் சந்திராஷ்டம நட்சத்திரங்கள் சுவாதி, விசாகம். சுபநேரங்கள் பகல் 10.45 – 11.45, மாலை 3.00 – 4.00 ராகுகாலம். 12.00 – 1.30, எமகண்டம் 7.30 – 9.00, குளிகை காலம் 10.30 – 12.00, வாரசூலம் –வடக்கு (பரிகாரம் – பால்) விஷ்ணு பதி புண்யகாலம் ஆடி அறுதி.
மேடம் நலம், ஆரோக்கியம்
இடபம் வீண்செலவு, விரயம்
மிதுனம் திறமை, முன்னேற்றம்
கடகம் பகை, பயம்
சிம்மம் விருத்தி, அதிர்ஷ்டம்
கன்னி செலவு, பற்றாக்குறை
துலாம் புகழ், பாராட்டு
விருச்சிகம் வெற்றி, அதிர்ஷ்டம்
தனுசு சலனம், சஞ்சலம்
மகரம் புகழ், சாதனை
கும்பம் அமைதி, தெளிவு
மீனம் பிரயாணம், அலைச்சல்
இன்று ரோகிணி நட்சத்திரம் கண்ணன் அவதார திரு நட்சத்திரம். “அருமறை முதல்வனை ஆழிமாயனை கருமுகில் வண்ணனைக் கமலக் கண்ணனைத் திருமகள் தலைவனைத்" தேவ தேவனை இருபத முளரிகள் இறைஞ்சி ஏத்துவாம் – வில்லிபாரதம். இன்று துவாரகா வாசனான கண்ணனை வணங்கி வழிபடுவோமாக.
“கற்க வேண்டியவற்றையும் கற்றவற்றையும் கருத்தில் வைப்பவனே கல்வியில் விருப்பமுள்ளவன் –கன்பூஷியஸ்)
கேதுவின் பூரண ஆதிக்கம் கொண்ட இன்று. அதிர்ஷ்ட எண்கள்: 2, 5, 1 பொருந்தா எண்கள்: 7, 8.
அதிர்ஷ்ட வர்ணங்கள்: வெளிரான மஞ் சள், பச்சை, நீலம்.
இராமரத்தினம் ஜோதி
(தெஹிவளை ஸ்ரீ விஷ்ணு கோயில்)