சுக்கில பட்ச தசமி திதி மாலை 4.25 வரை. அதன்மேல் ஏகாதசி திதி. அனுஷம் நட்சத்திரம் மாலை 5.58 வரை. பின்னர் கேட்டை நட்சத்திரம். சிரார்த்த திதி வளர்பிறை தசமி. சித்தயோகம். சமநோக்கு நாள் சந்திராஷ்டம நட்சத்திரங்கள்: அஸ்வினி, பரணி. சுபநேரங்கள்: பகல் 10.45 – 11.45, மாலை 4.45 – 5.45, ராகு காலம் 12.00 – 1.30, எமகண்டம் 7.30 – 9.00, குளிகை காலம் 10.30 – 12.00 வாரசூலம் – வடக்கு (பரிகாரம் – பால்)
மேடம் : உற்சாகம், மகிழ்ச்சி
இடபம் : போட்டி, ஜெயம்
மிதுனம் : அமைதி, பொறுமை
கடகம் : ஓய்வு, அசதி
சிம்மம் : ஆதாயம், லாபம்
கன்னி : நட்பு, உதவி
துலாம் : நஷ்டம், கவலை
விருச்சிகம் : செலவு, விரயம்
தனுசு : கவலை, சங்கடம்
மகரம் : புகழ், பெருமை
கும்பம் : அன்பு, பாசம்
மீனம் : பயம், பகை
இன்று அனுஷம் நட்சத்திரம். ஸ்ரீ மகாலஷ்மி தேவி இந் நட்சத்திர தேவதையாவார். அடியோமோடும் நின்னோடும் பிரிவின்றி ஆயிரம் பல்லாண்டு என்று பெரியாழ்வார் போற்றி துதிக்கப் பெறும் ஸ்ரீ லக் ஷ்மி நாராயணப் பெருமாளை இன்று வழிபடுதல் நன்று. ("ஜனநாயகத்திற்கு மக்களால் எந்தவித ஆபத்துமில்லை. ஆபத்து அரசியல்வாதிகளாலேயே" – பேரறிஞர் அண்ணா)
சந்திரனின் பூரண ஆதிக்கம் கொண்ட நாள் இன்று.
அதிர்ஷ்ட எண்கள்: 1, 5, 6, 7
பொருந்தா எண்கள்: 9, 8
அதிர்ஷ்ட வர்ணங்கள்: பச்சை, மஞ்சள்
இராமரத்தினம் ஜோதி (தெஹிவளை ஸ்ரீ விஷ்ணு கோயில்)