20.07.2017 ஏவிளம்பி வருடம் ஆடி மாதம் 04 ஆம் நாள் வியாழக்கிழமை.
கிருஷ்ணபட்ச துவாதசி திதி முன்னிரவு 11.25 அதன் மேல் திரயோதசி திதி. ரோகிணி நட்சத்திரம் மாலை 3.55 வரை. பின்னர் மிருகசீரிஷம் நட்சத்திரம். சிரார்த்த திதி. தேய்ப்பிறை துவாதசி. மரணயோகம், மேல்நோக்கு நாள். சந்திராஷ்டம நட்சத்திரங்கள் விசாகம், அனுஷம். சுபநேரம் பகல் 10.45 – 11.45, ராகுகாலம் 1.30 – 3.00, எமகண்டம் 6.00 – 7.30, குளிகைகாலம் 9.00 – 10.30. வாரசூலம் – தெற்கு (பரிகாரம் – தைலம்)
மேடம் காரியசித்தி, அனுகூலம்
இடபம் சந்தோஷம், மகிழ்ச்சி
மிதுனம் பொறுமை, அமைதி
கடகம் சோதனை, சங்கடம்
சிம்மம் நன்மை, அதிர்ஷ்டம்
கன்னி வரவு, லாபம்
துலாம் செலவு, பற்றாக்குறை
விருச்சிகம் முயற்சி, முன்னேற்றம்
தனுசு ஓய்வு, அசதி
மகரம் சிந்தனை, தெளிவு
கும்பம் அமைதி, சாந்தம்
மீனம் முயற்சி, முன்னேற்றம்
இன்று ரோகிணி நட்சத்திரம். துவாரகா நிலைய வாசனான கண்ணன் அவதரித்த திருநட்சத்திரம். "மடந்தாழ நெஞ்சத்துக் கஞ்சனார் வஞ்சம் கடந்தானை நூற்றுவர் பார் நாற்றிசையும் போற்றப் படர்ந்தாராண முழங்கப் பஞ்சவர்க்குத் தூது நடந்தானை ஏத்தா நா வென்ன நாவே “துவாரகா நாதா” என்னா நா வென்னா நாவே – சிலப்பதிகாரம்
சந்திரன், சூரியன் கிரகங்களின் ஆதிக்க நாளின்று.
அதிர்ஷ்ட எண்கள் : 1, 5, 7
பொருந்தா எண்கள் : 9, 8
அதிர்ஷ்ட வர்ணங்கள் : மஞ்சள், லேசான பச்சை
இராமரத்தினம் ஜோதி
(தெஹிவளை ஸ்ரீ விஷ்ணு கோயில்)